3. ஆண்மையாவது : ஆளுமைத்திறன். ஆண்தன்மை வேறு; ஆளுதல் தன்மைவேறு. இதன் முதனிலை உரிச்சொல் "ஆள்". அதன் முதனிலை உரிச்சொல் 'ஆண்' என்று அறிக. |
இயற்றலும் ஈட்டலும் தலைவற்கு ஆளுமை. காத்தலும் வகுத்தலும் தலைவிக்கு ஆளுமை. பிறவற்றையும் இவ்வாறே பகுத்துணர்ந்து கொள்க. |
எ - டு : | அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் |
| பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் |
| புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தருமெனப் |
| பிரிவெண்ணிப் பொருள்வயின் பிரிந்தநங் காதலர் |
| வருவர் கொல்வயங் கிழாய்வலிப் பல்யான் |
(கலி-11) |
இதன்கண் அளித்தலும் தெறுதலும் புணர்ச்சியும் தருமெனப் பொருள்வயிற் பிரிந்தான் தலைவன் என்பதும், தலைவி வலிப்பல் யான் என்பதும் இருவர் ஆளுமை ஒப்புமையைப் புலப்படுத்தி நின்றவாறு கண்டு கொள்க. |
4. ஆண்டாவது : அகவை. அஃது ஈண்டுப் பருவத்தை ஆகுபெயரிலக்கணத்தான் உணர்த்தி நின்றது. |
அஃதாவது தலைவற்குப் பதினாறு ஆண்டும் தலைவிக்குப் பன்னிரண்டாண்டும் நிரம்பி நிற்கும் வரைவிற்குரிய பருவமாம். இங்ஙனம் தலைவன் அகவையிற் காற்கூறு குறைதல் ஒப்புமை யகவை (ஆண்டு) என்றுணர்க. இதனை "மிக்கோ னாயினும் கடிவரை யின்றே" எனக் களவியலுள் கூறியுணர்த்தியமை கண்டு கொள்க. |
எ - டு : | குன்றக் குறவன் காதன் மடமகள் |
| வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி |
| வளையள் முளைவா ளெயிற்றள் |
| இளைய ளாயினும் ஆரணங் கினளே |
(ஐங்-256) |
இதன்கண் வளையள் - எயிற்றள் என்பவற்றான் தலைவி பருவமும் ஆரணங்கினள் என்று கூறியதனான் தான் அணங்கப்பட்டமை புலப்படுத்தினானாகலின் தலைவன் பருவமும் ஒத்துள்ளமை புலப்படும். |
5. உருவாவது : வனப்பு. அஃதாவது தோற்றமும் எழிலும் ஏற்றமுற விளங்கும் நிலை. |
எ - டு : | பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் |
| அஞ்சில் லோதி அனநடைக் கொடிச்சி |