ஏழைமையை மறந்தவழி உள்ளத்தே தலைமைச் செருக்கு மீதூருமாகலின் அது காதற்கேண்மைக்கு ஒவ்வாமையான் விலக்கப்பட்டதென்க. மற்று, இதனைத் தலைவிக்கே உரியதாகக் கொண்டு ஏழைமை, அறிவின்மை. அஃதாவது பேதைமை மறப்பு எனப்பொருள் கோடலுமாம். |
இதனையும் இரண்டாகக் கொள்வர் பேராசிரியர். மறப்பு, மறவி என்பார் அது பொச்சாப்பு எனமேல் விலக்கப்பட்டமையான் கூறியது கூறலாதல் காண்க. |
10. ஒப்புமையாவது : ஒருவரை ஒருவர் வடிவானும் வனப்பானும் பிறரொடு ஒப்பிட்டு நோக்குதல். அஃதாவது இன்னாளை ஒப்பாள் இவள் எனத்தலைவனும் இன்னானை ஒப்பான் இவன் எனத்தலைவியும் கருதுதலாம். அந்நோக்கு அறக்கற்பிற்கு ஒவ்வாத பண்பாகலின் விலக்கப்பட்டது. |
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் |
யாருள்ளி நோக்கினீர் என்று |
(குறள்-1320) |
எனத் தலைவியின் இல்லது காய்தல் பற்றி வரும் கூற்றில் இப்பொருள் வந்தவாறு கண்டுகொள்க. |
இவை இன்மை வேண்டுமென்றதனான் அகனைந்திணை பற்றிய நல்லிசைப் புலவோர் செய்யுட்கண் உதாரணம் காணல் கூடாமை தெரிக. |
இனி, இவை சுட்டி ஒருவர் பெயர் கூறி 'உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்துச் செய்யப்படும் தொடர்நிலைச் செய்யுட்கண் ஒரோவிடத்து வருமாறும் உலக வழக்கின்கண் ஆங்காங்கே நிகழுமாறும் நோக்கி இவற்றைத் தெரிந்து கொள்க. |
சூ. 276 : | கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரும் |
| உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் |
| நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே |
(27) |
க - து : | மேற்கூறிய மெய்ப்பாட்டிற்குரிய பொருள்களையும் அவற்றான் தோன்றும் எண்வகை மெய்ப்பாட்டினையும் திரிபின்றி அறிந்து கோடற்குரிய கருவி கூறுமுகத்தான் இவ்வியலுக்காவதொரு புறனடை கூறுகின்றது. |
பொருள் : மன்பதையுள் உயர்திணையாய மக்களிடத்தும், பிறவு முளவே அக்கிளைப் பிறப்பே (மரபியல்) எனப்பெற்ற உயிர்களிடத்தும் பல்வேறு நிலைகளில் நிகழும் நிகழ்ச்சிகளையும் |