338மெய்ப்பாட்டியல்

இல்வலியுறுத்தல்   என்னும்   பொருள்பற்றி   வந்த  பெருமிதம் என்னும்
மெய்ப்பாடாம். தலைவனைக் கருதுமிடத்துப் புலன்  என்னும் பொருள்பற்றி
வந்த உவகை என்னும் மெய்ப்பாடாம்.
 

இவையே கண்ணாற் காணும்  நாடகக்  காட்சிக்கும்  அறிவாற்  காணும்
இலக்கியக் காட்சிக்கும் உரிய வேறுபாடாகும்.
 

இனி,   இச்செய்யுட்குத்  "தலைவரு  பொருண்மையான்" முடிக்கப்படும்
மெய்ப்பாடு யாது என நோக்குமிடத்து  நன்னயப்  பொருளைத்  தலைவன்
கூற்றாகப் புலவர் யாத்துள்ளமையான் தலைவனுடைய சுவைவழித்தோன்றும்
மெய்ப்பாடாகிய உவகையே இதற்குரிய மெய்ப்பாடாதல் தெளியலாம்.
 

எனவே,   இச்செய்யுளின்  மெய்ப்பாடாகிய  உறுப்பு,  புலன்  என்னும்
பொருள் பற்றிவந்த உவகை  என்பதாம். பிறவற்றையும்  இவ்வாறே நாடகச்
சுவையொடு ஒப்பிட்டு மெய்ப்பாட்டியல்பினை ஓர்ந்துணர்ந்து கொள்க.
 

மெய்ப்பாட்டியல் உரை முற்றும்.