340உவமவியல்

தொல்காப்பியத்துள்  கூறப்படும்    உள்ளுறையுவமம்,    ஏனையுவமம்
என்னும் பொருளிலக்கணப்பகுதியை அணியிலக்கணங்  கூறுவதாகக்  கருதி
உவமை என்னும் அணியிலிருந்தே பிற அணிகள் யாவும் விரிந்தனவாதலின்
அவற்றையெல்லாம்   அடக்கி   இவ்வாசிரியர்    உவமவியல்  கூறுவதாக
மயங்குவார் பலர்.
 

தமிழ் இலக்கணம் யாவும் வடமொழி இலக்கணங்களை அடிப்படையாகக்
கொண்டு    வரையப்பட்டவை    எனக்   கருதுவார்க்கும்    அதற்கேற்ப ஆய்வுரைகளைக்  கூறுவார்க்கும்  தமிழிலக்கணத்தின்  தொன்மையினையும்
தொல்காப்பியத்தின்    நுண்மையினையும்     எடுத்துக்கூறித்    தமிழின்
தனித்தன்மையை  ஏற்கச் செய்வதென்பது ஏறா மேட்டிற்கு  நீர்பாய்ச்சுதலை
ஒக்கும் என்க.
 

இனித்,   தொல்காப்பியர்    உவமத்தினைப்    பொருளிலக்கணத்தின்
சிறந்ததொரு கூறாக அமைத்துணர்த்துவதனை,
 

உள்ளுறை யுவமம் ஏனை யுவமமெனத் 

தள்ளா தாகும் திணையுணர் வகையே 

(அகத்-50)
 

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் 

கொள்ளு மென்ப குறியறிந் தோரே

(அகத்-51)
 

உள்ளுறுத் திதனொடு ஒத்துப்பொருள் முடிகென 

உள்ளுறுத் திறுவதை உள்ளுறை யுவமம் 

(அகத்-51)
 

ஏனை யுவமம் தானுணர் வகைத்தே

(அகத்-52)
 

எனவரும் அகத்திணையியற் சூத்திரங்களானும்
 

நோயும் இன்பமும் இருவகை நிலையிற் 

காமங் கண்ணிய மரபிடை தெரிய 

.... ....... ........ ......... ......... .........

இருபெயர் மூன்றும் உரிய வாக 

உவம வாயிற் படுத்தலும் உவமம் 

ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி  

(பொருள்-2)
 

இறைச்சி தானே உரிப்புறத் ததுவே  

(பொருள்-33)
 

இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே 

திறத்தியன் மருங்கின் தெரியு மோர்க்கே 

(பொருள்-34)
 

அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும் 

வன்புறை யாகும் வருந்திய பொழுதே 

(பொருள்-35)