தொல்காப்பியத்துள் கூறப்படும் உள்ளுறையுவமம், ஏனையுவமம் என்னும் பொருளிலக்கணப்பகுதியை அணியிலக்கணங் கூறுவதாகக் கருதி உவமை என்னும் அணியிலிருந்தே பிற அணிகள் யாவும் விரிந்தனவாதலின் அவற்றையெல்லாம் அடக்கி இவ்வாசிரியர் உவமவியல் கூறுவதாக மயங்குவார் பலர். |
தமிழ் இலக்கணம் யாவும் வடமொழி இலக்கணங்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவை எனக் கருதுவார்க்கும் அதற்கேற்ப ஆய்வுரைகளைக் கூறுவார்க்கும் தமிழிலக்கணத்தின் தொன்மையினையும் தொல்காப்பியத்தின் நுண்மையினையும் எடுத்துக்கூறித் தமிழின் தனித்தன்மையை ஏற்கச் செய்வதென்பது ஏறா மேட்டிற்கு நீர்பாய்ச்சுதலை ஒக்கும் என்க. |
இனித், தொல்காப்பியர் உவமத்தினைப் பொருளிலக்கணத்தின் சிறந்ததொரு கூறாக அமைத்துணர்த்துவதனை, |
உள்ளுறை யுவமம் ஏனை யுவமமெனத் |
தள்ளா தாகும் திணையுணர் வகையே |
(அகத்-50) |
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் |
கொள்ளு மென்ப குறியறிந் தோரே |
(அகத்-51) |
உள்ளுறுத் திதனொடு ஒத்துப்பொருள் முடிகென |
உள்ளுறுத் திறுவதை உள்ளுறை யுவமம் |
(அகத்-51) |
ஏனை யுவமம் தானுணர் வகைத்தே |
(அகத்-52) |
எனவரும் அகத்திணையியற் சூத்திரங்களானும் |
நோயும் இன்பமும் இருவகை நிலையிற் |
காமங் கண்ணிய மரபிடை தெரிய |
.... ....... ........ ......... ......... ......... |
இருபெயர் மூன்றும் உரிய வாக |
உவம வாயிற் படுத்தலும் உவமம் |
ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி |
(பொருள்-2) |
இறைச்சி தானே உரிப்புறத் ததுவே |
(பொருள்-33) |
இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே |
திறத்தியன் மருங்கின் தெரியு மோர்க்கே |
(பொருள்-34) |
அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும் |
வன்புறை யாகும் வருந்திய பொழுதே |
(பொருள்-35) |