342உவமவியல்

உவமத் தன்மையும் உரித்தென மொழிப 

பயனிலை புரிந்த வழக்கத் தான  

(உவம-26)
 

உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்.  

(உவம-27)
 

என ஆசிரியர் தெளிவுபடுத்தலான் அறியலாம்.
 

உவமப்பொருள்   உவமத்தன்மை   உவமச்சொல்   (உருபு)   மூன்றும் பொருளை. (உவமேயத்தை) விளக்கி  நிற்கும் காரணத்தான் அம்மூன்றையும்
உவமம் என்னும் குறியீட்டான்  வழங்குதல்   நூலாசிரியன்மார்  மரபாகும்.
அவற்றை இடம் நோக்கி வேறுபடுத்து உணர்தல் வேண்டும்.
 

மெய்ப்பாடு உரிப்பொருளின் கூறாகிய  பண்பையும் செயலையும் பற்றிச்
செய்யுளுள் அமைந்து  உணர்வுப்  பொருளைப் புலப்படுத்தலின் அதனைச்
செய்யுளுறுப்பாகவும் உவமம்  முதல், கரு,  உரி   என்னும்  திணைக்குரிய
பொருளைத்   தோற்றுவித்து   நிற்றலின்  செய்யுள்  போலத் திணையுணர்
வகையாகவும் நூலோர் ஓதுவாராயினர்.
 

இருவகைக்  கைகோள்  பற்றி  நிகழும்  அகஒழுக்கம்  ஒத்த கிழவனும்
கிழத்தியுமாகிய தலைமக்களைப் பொருளாகக் கொண்டு  நடத்தலான், அவர்
தம்   உணர்வுகளையும்   செயல்களையும்    புலப்படுத்துங்கால்    தாமே
புலப்படுத்தலும்   தோழி, செவிலி,   கண்டோர்,   பாங்கர்  முதலாய  பிற
அகத்திணை  மாந்தராற்  புலப்படுதலும்  என  அப்புலப்பாடு வகைப்பட்டு
நிகழ்தலான்   அவ்வவர்  தம்   கூற்றுக்களின்  அடிப்படையில்    உவம
இலக்கணம்  அமைவதாயிற்று.   மெய்ப்பாடு    அதற்குத்  துணையாகவும்
நிலைக்களனாகவும் அமைவதாயிற்று. இதனை,
 

நோயும் இன்பமும் இருவகை நிலையிற் 

காமங் கண்ணிய மரபிடை தெரிய 

எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய 

உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல் 

மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும் 

சொல்லா மரபின வற்றொடு கெழீஇச் 

செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும் 

அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும் 

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ 

இருபெயர் மூன்றும் உரிய வாக 

உவம வாயிற் படுத்தலும் உவமம் 

ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி (பொருள்-2) என்றும்.