2களவியல்

களவியல்   கற்பியல்களுள்    ஓதப்படும்   கிளவிகளும்,  பிரிவுகளும்,
பரத்தையிற்பிரிவும்  காமக்கிழத்தியர்   கூட்டமும்   தலைமக்களாக  ஓதப் பெறுவார் யாவர்க்கும் உரியவெனக் கருதுதலும், களவியலுள்   ஓதப்பெறும் நால்வகைப் புணர்வும், மெய்தொட்டுப் பயிறல்     முதலாய   கிளவிகளும்
பிறவும்    ஒவ்வொருவர்    மாட்டும்  முறையாக நிகழும் எனக்கோடலும் இரவுக்குறி, பகற்குறி, உடன்போக்கு, வரைவுகடாதல் முதலியவை  முறையே நிகழ்ந்த   பின்னரே   வரைவு    நிகழும்    எனக்கோடலும் இலக்கணக் கோட்பாடுகளைப் பிறழ உணர்தலாகும்.
 

இவ்     ஆசிரியர்    எண்வகை   மெய்ப்பாடுகட்குரிய பொருள்களை
விரித்துக்கூறி    அவற்றைப்    பிறப்பு    முதலாய    பத்தும்     ஒத்த
தலைமக்கட்மாட்டே    கொள்ளுதல்    வேண்டும்.   நிம்பிரி   கொடுமை
முதலியவற்றைக் கூறாமல் நீக்குதல் வேண்டும்  என   எடுத்துக் கூறியாங்கு காம ஒழுக்கத்தின்கண் கயமைப்பாங்கான இன்ப நிலைகள்  இவை    எனச் சுட்டி அவற்றை விலக்க வேண்டுமென   விதந்து   கூறாமல்,   அறநெறிக் கொத்தனவற்றை மட்டுமே விரித்துக் கூறி ஒவ்வாதவற்றை   உய்த்துணர்ந்து கொள்ளுமாறு ஓதியுள்ளமையை ஓர்ந்து தெளிதல் வேண்டும்.
 

ஒருசார் ஆரியமொழி இலக்கியங்களுள் வரும் பரகீயம் எனப்படும் பிறர் மனைப் புணர்ச்சியும் - பிறப்பு    முறையைப்    புறக்கணித்த   மறவழிப் புணர்ச்சியும், ஒத்தபாலாரின் ஒவ்வாப் புணர்ச்சியும்  மையலுற்றாரைக் கூடும் கயமைப் புணர்ச்சியும் அவை போல்வனவாகிய  பிறவும்   அறநெறி கூறும் மறை    வழி ஒழுகும் மக்களுக்குரிய ஒழுகலாறாகாமையான்   அவற்றைக் குறிப்பாகவேனும் யாண்டும் சுட்டாத தமிழிலக்கிய   மரபின் பண்பாட்டினை ஓர்தல் வேண்டும்.
 

தொல்காப்பியம் கூறும் ஒழுகலாறுகள் யாவும் நானிலத்துள் ஆங்காங்கே நிகழ்வனவே யாதலின் அவற்றைத் தொகுத்து அவையே   மக்கள்  நுதலிய அகனைந்திணையெனவும் அவற்றை இலக்கியமாக   உரைக்குங்கால்  நாடக வழக்கொடு கூட்டி நயம்பட இசைத்தல்   தமிழ்   மரபெனவும்    அறிதல் வேண்டும். இலக்கண நூலின் கடப்பாடு தான்  எடுத்துக்கொண்ட  பொருள் பற்றிய யாவற்றையும் தொகுத்து    நிரலாகக்கூறுதலாகும்.     அவ்விதிகள் சிலவற்றிற்கு ஏற்கும். சிலவற்றிற்கு ஏலா.
 

பொருளிலக்கணநூல்   மக்களின்    ஒழுகலாறு பற்றிப் படைக்கப்படும்
செய்யுளுள் வரும் நிகழ்ச்சிகளை இவை   இன்ன    விதி  பற்றியவை என
அறிந்து கொள்ளவும் அவ்விதிகளை அடிப்படை