பக்கம் எண் :

இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும் சூ.1389

எனவரும்    சிலப்பதிகார    வென்பாவும்,    பின்பனிக்காலம்   பிரிவுக்கும்.  இளவேனில்  கூடலுக்குமே
ஏற்புடைத்தென்பதை வலியுறுத்தல் காண்க.
  

13.

இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்1
உரியதாகும் என்மனார் புலவர்.
(13)

 

ஆ.மொ.இல.
  

The  poets  say  that  when two kinds of separation take place permanently it is suitable
(it-the later part of the snow-season).
  

இளம்பூரணர்
  

13. இருவகைப் பிரிவும்.. . . . . . . புலவர்.
  

இது பாலைக்கு உரிய பொருளாம் ஆறு உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)  இருவகை பிரிவும்-இருவகைப்  பிரிவான தலைமகளைப் பிரிதலும் தலைமகளை உடன்கொண்டு
தமர்வரைப்  பிரிதலும்,  நிலைபெற  தோன்றலும்-நிலைபெறத்  தோன்றலும்,  உரியது  ஆகும்  என்மனார்
புலவர்-பாலைக்கு உரிய பொருளாம் என்று கூறுவார் புலவர்.
  

உம்மை1  எச்ச  உம்மையாகலான்,  நிலைபெறத்  தோன்றாது  பிரிதற்குறிப்பு 2நிகழ்ந்துழியும் பாலைக்கு
உரிய  பொருளாம்  என்று   கொள்க.  அதிகாரப்பட்டு3 வருகின்றது.  பாலையாகலின், இருவகைப் பிரிவும்
பாலைக்குரிய பொருளாயின.                                                             (13)


1. தோன்றினும்-பாடம்.
  

1. நிலை பெறத்தோன்றினும் என்பதன் உம்மை.
  

2. பிரிதற்குறிப்பு-பிரிவுண்டு   என்று   கொள்ளுமாறு  தலைவனிடம்  நிகழும்  பாராட்டுதல்  முதலிய
செயல்களாம்.
  

3. முன்னிரு சூத்திரங்களில் தொடர்பாகச் சொல்லப்பட்டு