“குன்ற வெண்மண லேறி நின்றுநின் றின்னுங் காண்கம் வம்மோ தோழி களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றுந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே.” |
வருகின்றாரெனக் கேட்ட தலைவி தோழிக்கு உரைத்தது இது பின்பனி நின்ற காலம்5 வரைவின்றி வந்தது. |
கடலிடைக் கலத்தைச் செலுத்துதற்கு உரிய காற்றொரு பட்ட காலம் யாதானுங்6 கொள்க. ‘ஆகும்’ என்றதனால் வேத வணிகரும் பொருளின்றி இல்லறம் நிகழாத காலத்தாயிற் செந்நீ வழிபடுதற்கு உரியோரை நாட்டிக் கலத்திற் பிரிதற்கு உரியரென்று கொள்க. |
13. இருவகைப் . . . . . . புலவர் |
பாரதியார் |
கருத்து :- இது முதிர்வேனிலிற் பிரிந்தார் கார் காலத்து மீண்டு வந்து கூடலும், பின்பனிக்காலம் பிரிந்தார் இளவேனிலில் கூடலும், மரபென்பதை விளக்குகிறது. |
|
பொருள் :- இருவகைப் பிரிவு - முன்னையிரு சூத்திரங்களிலும் கூறப்பெற்ற வேனிற் பிரிவும், பின்பனிப்பிரிவும்; நிலைபெறத் தோன்றினும்-பிரிதல் நிமித்தங்களாக அமையாது, பிரிந்து நின்ற பாலையாகவே உருப்படினும்; உரியதாகும் என்மனார் புலவர்-அது பாலைக்குரியதேயாகும் என்று கூறுவர் புலவர். |
குறிப்பு :- இதில் இருவகைப் பிரிவென்பதற்கு உரையாசிரிய ரிருவரும் இரு வேறுரைகள் தருவாராவர். தொல்காப்பியர் தம் இலக்கண நூலில் யாண்டும் தாம் நுதலும் பொருளை ஐயமற வரையறுத்து விளக்குவதைக் கடனாகக் கொண் |
5. பின்பனி நீங்கிய காலம் |
6. இளவேனிலாவது முதுவேனிலாவது |