பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.6, 759

துளி     மிகுதலிற்    சேறல்   அரிதாதலானும்,   பானாட்   கங்குலிற்பரந்துடன்   வழங்காது   மாவும்
புள்ளுந்துணையுடன்  இன்புற்றுவதிதலிற்  காமக்  குறிப்புக்  கழியப்பெருகுதலானும் காதன்மிகுதி நோக்காது
வருந்தலைவனைக்  குறிக்கண்  எதிர்ப்பட்டும்   புணருங்கால்   இன்பம்   பெருகுதலின்,  இந்நிலத்திற்குக்
கூதிர்க்காலஞ் சிறந்ததெனப்படும்.
  

உதாரணம் :-
  

”விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப
வேந்தனும் வெம்பகை தணிந்தனன் றீம்பெயர
காரு மார்கலி தலையின்று தேரு
மோவத் தன்ன கோபச் செந்திலம்
வள்வா யாழி யுள்ளுறு புருளக்
கடவிக் காண்குவம் பாக மதவுநடைத்
தாம்பசை குழவி வீங்குசுரை மடியக்
கனையலங் குரல காற்பரி பயிற்றிப்
படுமணி மிடற்ற பயநிலை யாயங்
கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர்
கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க
மனை மனைப் படரு நனைநகு மாலைத்
தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப்
புன்கா னெல்லிப் பைங்காய் தின்றவர்
நீர்குடி அவையிற் றீவிய மிழற்றி
முகிழ்நிலாத் திகழ்தரு மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி யென்மக னெற்றி
வருகுவை யாயிற் றருகுவென் பாலென
விலங்கமர்க் கண்ணன் விரல்விளி பயிற்றிந்
திதலை யல்குலெங் காதலி
புதல்வர்ப் பொய்க்கும் பூங்கொடி நிலையே”

(அகம்-54)
 

இது பாகற்குரைத்தது.
  

இது முல்லைக்கட் காரும் மாலையும் வந்தது
 

“மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே
கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே
யாமங் கொளவரிற் கனைஇக் காமங்
கடலினு முரைஇக் கரைபொழி யும்மே