பக்கம் எண் :

இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும் சூ.1395

தாழ்நீர் ரனந்தலை யழுந்துபடப் பாஅய்
மலையிமைப் பதுபோல் மின்னிச்
சிலைவல் வேற்றெடு செறிந்தவிம் மழைக்கே.”

(நற்-112)
  

இன்னும்  “இலையில்  பிடவம்  ஈர்ம்  மலரரும்ப”  எனும்  பெருங்கண்ணனார் நற்றிணைப் பாட்டிலும்
இத்துறை வருதலறிக.
  

“கார் தொடங் கின்றே காலை; வல்விரைந்து
செல்க, பாக! நின் தேரே உவக்காண்
கழிப்பெயர் களரிற் போகிய மடமான்
விழிக்கட் பேதையொ டினனிரிந் தோடக்
காமர் நெஞ்சமொ டகலாத்
தேடூஉ நின்ற இரலை யேறே.”

(நற்-242)
  

இன்னும்,
  

“உலகிற் காணி யாகப் பலர்தொழப்
பலவயி னிலைஇய குன்றிற் கோடுதோ
றேயினை உரைஇய ரோ பெருங்கலி எழிலி!
படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்
பெழீஇ யன்ன உறையினை; முழவின்
மண்ணார் கண்ணி னிம்மென இமிரும்
வணர்ந்தொலி கூந்தன் மாஅ யோளொடு
புணர்ந்தினிது நுகர்ந்த சாரல் நல்லூர்
விரவு மலருதிர வீசி
இரவுப்பெயல் பொழிந்த உதவி யோயே.”

(நற்-139)
  

எனும்  பெருங்  கௌசிகனார்  பாட்டும் முதுவேனிற் பிரிந்தார் காரிற் கூடியின் புறலை விளக்கும் பரிசு
களித்தற்குரியது.
  

3. இனி, பின்பனி பிரிவுக்குப் பாட்டு:-
 

“அம்ம வாழி தோழி! காதலர்
நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்
தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பலவா குவவே.”

(குறுந்-104)