“அம்ம வாழி தோழி! முன்னின்று பனிக்கடுங் குரையம் செல்லா தீமெனச் சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே.” |
(குறுந்-350) |
4. பின்பனியிற் பிரிவார் இளவேனில் கூடுவதற்குச் செய்யுள்:- |
“.............................................. ஆற்றறல் நுணங்கிய நாட்பத வேனி லிணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும் நல்வயி னினையும் நெஞ்சமொடு கைமிகக் கேட்டொறுங் கலுமுமால் பெரிதே ................................................................ துண்பஃ றித்தி மாஅ யோளே.” |
(நற்-157) |
இன்னும் |
“அன்பினர், மன்னும் பெரியர்................. ............................................................................ செங்க ணிருங்குயில் எதிர்குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயிற் பிரியல மென்று தெளித்தோர் தேஎத் தினியெவன் மொழிகோ யானே............. வெம்முனை அருஞ்சுர முன்னி யோர்க்கே.” |
(நற்-224) |
எனவருமிப் பெருங் கடுங்கோ பாட்டும், “ஈங்கே வருவர்; இனையல்” என்னும் கச்சிப்பேட்டு நன்னாகையார் குறும்பாட்டும். இத்துறையையே விளக்குதல் காண்க. (11) |
சிவலிங்கனார் |
இச்சூத்திரம் களவுப் பிரிவும் கற்புப் பிரிவும் பாலை எனப்படும் என்கிறது. |
(இ-ள்) களவில் நிகழும் பிரிவும் கற்பில் நிகழும் பிரிவும் ஆகிய இருவகைப் பிரிவுகளும் செய்யுளில் நிலைபெறுமாறு தோன்றினும் அவைகள் பாலைத் திணைக்கு உரியவாகும் என்றவாறு. |