பக்கம் எண் :

திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே சூ.1499

எனவே, காலம் மயங்கும் என்றவாறாயிற்று.
  

அதற்குச் செய்யுள்:-
  

“தொல் ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தான்
பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போல்
எல்லறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய
நல்லற நெறிநிறீஇ உலகாண்ட அரசன்பின்
அல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம்போல் மயங்கிருள் தலைவர
எல்லைக்கு வரம்பாய இடும்பைகூர் மருள் மாலை”
2
பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்
தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்திறம்
நோய்தெற உழைப்பார்கண் இமிழ்தியோ எம்போலக்
காதல்செய் தகன்றாரை உடையையோ நீ;
மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில்
நன்றறை கொன்றனர் அவரெனச் கலங்கிய
என்துயர் அறிந்தனை நரறியோ எம்போல
இன்துணைப் பிரிந்தாரை உடையையோ நீ;
பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல்
இனிவரின் உயருமன் பழியெனக் கலங்கிய
தனியவர் இடும்பைகண் டினைதியோ எம்போல
இனியசெய் தகன்றாரை உடையையோ நீ; எனவாங்கு,

அழிந்தயல் அறிந்த எவ்வம் மேற்படம்
பெரும்பே துறுதல் களைமதி பெரும!
வருந்திய செல்லல் தீர் திறனறி ஒருவன்
மருந்தறை கோடலிற் கொடிதே யாழநின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்துக விடினே.”

(கலி-நெய்-12)
 

எனவரும். 


2. இடும்பை  கூர்  மருள்  மாலைஎன  முல்லைக்குரியமாலைப் பொழுது  இந்நெய்தல் திணைப்பாடலில்
வந்தது.