இவை குறிஞ்சிக்கண் மருதம் நிகழ்ந்தன; இவை ஓரொழுக்கம் நிகழ்தற்கு உரியவிடத்தே ஓரொழுக்கம் நிகழ்ந்தன7 |
“அன்னாய் வாழிவேன் டன்னையென் றோழி பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதி யாயி னென்னதூஉ மறிய வாகுமோ மற்றே முறியினர்க் கோங்கம் பயந்த மாறே.” |
(ஐங்குறு-366) |
இஃது இவ்வேறுபாடென்னென்ற செவிலிக்குத் தோழிபூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல். |
இது பாலையிற் குறிஞ்சி8 |
இஃது உரிப்பொருளோடு உரிப்பொருள் மயங்கிற்று9 மேல் வருவனவற்றிற்கும் இவ்வாறு உய்த்துணர்ந்து கொள்க. |
“வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழின் முளைநிரை முறுவ லொருத்தியொடு நெருநற் குறிநீ செய்தனை யென்ப வலரே குரவ நீள்சினை யுறையும் பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே.” |
(ஐங்குறு-369) |
7. நிலத்தால் குறிஞ்சி ஒழுக்கத்தால் ஊடலும் வந்தன. இடம் நிலம்-முதற்பொருள், குறிஞ்சி நிலத்தில் மருத ஒழுக்கம் நிகழ்ந்தது திணைமயக்கம். |
8. கோங்கம் பாலைக்கருப்பொருள். அதனால் இப்பாடல் பாலைத் திணைக்குரியதாம். கோங்கம்பூத்தந்து புணர்ந்தான் எனக்குறிப்பிற் கூறி அறத்தொடு நிற்றலால் குறிஞ்சி ஒழுக்கம் கூறப்பட்டது. |
9. இத்தொடர்தவறு. |