இது பொழிலிடத்து ஒருத்தியொடு தங்கிவந்தும் யான் பரத்தையை அறியேனென்றாற்கு தோழி கூறியது.10 |
“வண்சினைக் கோங்கின் றண் கமழ் படலை யிருஞ் சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப நீநயந் துறையப் பட்டோள் யார ளோவெம் மறையா தீமே.” |
(ஐங்குறு-370) |
இது பரத்தையர்க்குப் பூவணிந்தமை கேட்ட தலைவி அஃதின் றென்றாற்குக் கூறியது.11 |
இவை பாலைக்கண் மருதம் நிகழ்ந்தன. |
‘அருந்தவ மாற்றியார்12, என்னும் பாலைக்கலியும் அது. |
“அன்னை வாழிவேண் டன்னை யுதுக்கா ணேர்கொடிப் பாசடும்பு பரிய வூர்பிழிபு நெய்தன் மயக்கிவந் தன்று நின்மகள் பூப்போ லுண்கண் மரீஇய நோய்க்கு மருந் தாகிய கொண்கன் றேரே” |
(ஐங்குறு-101) |
இஃது அறத்தொடு நின்றபின் வரைதற்குப் பிரிந்தான் வரைவொடு வந்தமை தோழி செவிலிக்குக் காட்டியது. |
10. குரவ நீள்சினையுறையும் பருவம் என்றதால் குரவுக்கருப் பொருளாலும் குரவமலர்க்கிளையில் குயில்வதியும் பருவம் என்பதால் இளவேனிற் பருவம் கூறப்பட்டன. அதனால் பாலை நிலமாயிற்று. நீநெருதல் ஒருத்தியொரு குறி செய்தனை என்று அவர் கூறுவர் என்றதால் ஊடல் ஒழுக்கம் கூறப்பட்டது. |
11. கோங்கு கூறியதால் பாலைநிலமும் நீநயந்துறையப் பட்டாள் யார்? மறையாது கூறுமின் என்றதால் ஊடலும் பெறப்படும். |
12. பாலைக்கலி 20. |