இது நெய்தலிற் குறிஞ்சி. |
“கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே.” |
(ஐங்குறு-122) |
“கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே உறாஅ வறுமுலை மடாஅ வுண்ணாப் பாவை யூட்டு வோளே.” |
(ஐங்குறு-128) |
இவை பெதும்மைப் பருவத்தாள் ஒரு தலைவியொடு வேட்கை நிகழ்ந்தமையைத் தலைவி கூறித் தலைவன் குறிப் புணர்ந்தது. |
இப்பத்தும் நெய்தற்கண் மருதம் |
“யானெவன் செய்கோ பாண வனாது மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் புல்லென் றனவென் புரிவளைத் தோளே.” |
(ஐங்குறு-133) |
இது தலைவன் புறத்துப்போன அத்துணைக்கு ஆற்றாகுதல் தகாதென்ற பாணற்குத் தலைவி கூறியது. |
இப்பத்தும் நெற்கற்கண் மருதம். |
“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை மிதிப்ப நக்க கண்போ னெய்தல் கட்கமழ்ந் தானாத் துறைவற்கு நெக்க நெஞ்ச நேர்கல் லேனே.” |
(ஐங்குறு 151) |
இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயின் மறுத்தது. |
இப்பத்தும் நெய்தற்கண் மருதம். |
“இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி முகம்புதை கதுப்பின ளிறைஞ்சிநின் றோளே |