புலம்புகொள் மாலை மறைய நலங்கே ழாக நல்குவ ளெனக்கே.” |
(ஐங்குறு-197) |
இது இடந்தலைப்பாட்டிற் றலைவி நிலைகண்டு கூறியது. இது நெய்தலிற் புணர்தனிமித்தம். |
“வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன் றண்ணக மண்ணளை நிறைய நெல்லி னிரும்பூ வுறைக்கு மூரற்கிவள் பெருங்கவி னிழப்ப தெவன்கொ லன்னாய்.” |
(ஐங்குறு 30) |
இது தோழி அறத்தொடு நின்றது. |
“பழனக் கம்புள் பயிர்ப்பெடை யகவுங் கழனி யூரநின் மொழிவ லென்றுந் துஞ்சுமனை நெடுநகர் வருதி யஞ்சா யோவிவ டந்தகை வேலே.” |
(ஐங்குறு 60) |
இதுதோழி இரவுக்குறிமறுத்தது. |
“நெறிமருப் பெருமை நீல விரும்போத்து வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்குங் கழனி யூரன் மகளிவள் பழன வெதிரின் கொடிப்பினை யலளே.” |
(ஐங்குறு-91) |
இஃது இளையள் விளைவில ளென்றது.1 |
“கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக் காதற் குழவிக் கூறுமுலை மடுக்கு நுந்தை நும்முர் வருது மொண்டொடி மடந்தை நின்னையாம் பெறினே.”2 |
(ஐங்குறு-92) |
1. பொய்கை ஆம்பலை எருமைப் போத்து மயக்கும் என்றது மருதம். பழன வேதிதின் (கரும்பு) மாலை அணிந்தவள் என்றது இளையள் புணர்ச்சிக்குரிய விளைவு இவள் என்றது சேட்படையாதலின் குறிஞ்சி. |
2. எருமைப் புனிற்றா கிழவிக்கு முலை மடுக்கும் என்றது நின்னையாம் பெறின் வருதும் என்றது குறிஞ்சி. |