வந்தாரென ஆற்றுவித்தது. |
இதில் வேனிலும் வாடையும் கங்குலும் மாலையும் வந்தன. |
“அம்ம வாழி தோழி சிறியிலைக் குறுஞ்சினை வேம்பி னறும்பழ முணீஇய வாவ லுகக்கு மாலையு மின்றுகொல் காதலர் சென்ற நாட்டே.” |
(ஐங்குறு-339) |
இவ் வைங்குறு நூறு பாலைக்கண் மாலை வந்தது.9 |
“தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற் கடும்பகல் வருதி கையறு மாலை கொடுங்கழி நெய்தலுங் கூம்பக் காலை வரினுங் களைஞரோ விலரே.” |
(ஐங்குறு-183) |
பருவ வரவின்கண் மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறியது. |
இவ் வைங்குறுநூறு நெய்தற்கண் மாலை வந்தது.10 |
“தொல்லூழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தாற் பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போ லெல்லறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய நல்லற நெறிநிறீஇ யுல காண்ட வரசன்பி னல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம்போன் மயங்கிரு டலைவர வெல்லைக்கு வரம்பாய விடும்பைகூர் மருண்மாலை |
9. உரிபொருளால் பாலை. முல்லைக்குரிய சிறுபொழுது வந்தது. |
10. சேர்ப்பன் என்பதாலும் (நிலத்தால்) உரிப்பொருளாலும் நெய்தல் மாலைவருதி என்பதால் முல்லைக்குரிய சிறுபொழுது வந்தது. |