பக்கம் எண் :

திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே சூ.14117

எனும் திணைமாலைப் பாட்டில் நெய்தற்றிணை பாலை நிலத்து மயங்குதல் அறிக.                (12)
  

சிவலிங்கனார்
  

பாடலுட்    பயிலும்  பொருள்கள்  முதல்   கரு  உரி  என்னும்  மூன்றுமாம்  என்றும்  அம்மூன்றன்
காரணமாகத்திணை  உணரப்படும்   என்றும்  அவற்றுள்  முதற் பொருளாவன நிலமும் பொழுதும் என்றும்
எவ்வெந்நிலத்துக்கு  எவ்வெப்பொழுது   உரியது   என்றும்  கூறி  வந்த  ஆசிரியர் நிலத்தொடர்பாகவே
‘திணைமயக்குறுதலும்’  என்னும்  இச்சூத்திரம்  கூறினார்  என்க.  அதாவது  நிலம்  பொழுதும்  என்னும்
முதற்பொருள்  தொடர்பாகவே  கூறினார்.  அதனால்  திணைமயக்குறுதல்   என்பது  நிலமும்  பொழுதும்
மயங்குதலையே  குறிக்கும்.  ஆனால் ‘நிலன் ஒருங்கு  மயங்குதல்  இன்று,  என்றதால் திணைமயக்குறுதல்
என்பது   பொழுதுமயங்குதலையே  குறிக்கும்.   திணையுணர்தற்குக்   கருப்பொருளும்   உரிப்பொருளும்
காரணங்களாக  அமைதலின்  திணைமயக்குறுதல்  என்பது  கருப்பொருள்  மயக்கத்தையும்  உரிப்பொருள்
மயக்கத்தையும்  உணர்த்தாதோ  எனின் பின்னர் அடுத்து  ‘உரிப்பொருள் அல்லன  மயங்கவும்  பெறுமே
(15)   என   உரிப்பொருளை  விலக்கிக்கருப்பொருள்  மயங்கும்   என்று   கூறுதலின்   இச்சூத்திரத்துத்
திணைமயக்குறுதல் என்றது பொழுது மயங்குதலையே குறிக்கும் என்க.
  

ஒரு    நிலத்தில் பிறிதோர்நிலம் சேர்ந்திருத்தாலோ ஒரு நிலம் இருக்கவேண்டிய இடத்தில் அஃதின்றிப்
பிறிதோர்  நிலம்  வந்து  நிற்பதோ  நடவாதது  ஆதலின்   செய்யுள்   செய்வாரும் அவ்வாறு செய்யார்;
ஆதலின்  நிலன்  மயங்குதல்  இல்லை.  கார்ப்பொழுதில்  வேனிற்பொழுது  போல்  ஞாயிறு  காய்தலும்
வேனிற்  காலத்துக்  கார்  வருவதும்  பெருமழை (கூதிர்) வருவதும்  நிகழக்கூடியன.  ஆதலினாலும் ஒரு
நாளின்  சிறு  பொழுது  ஆறும்  எந்நாளிலும்  வருதலின்  எல்லா   நிலங்களுக்கும்  உரியவாதலினாலும்
பொழுதாகிய  முதற்  பொருள்  மயக்கம்  உண்டு.  அவ்வந்நிலக்கருப்  பொருள்கள்  அவ்வந்நிலத்துக்கே
சிறந்தன வாயினும் பிறநிலங்களிலும் ஆங்காங்கு தோன்றும் ஆதலினால்