பக்கம் எண் :

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே சூ 15119

உம்மை எதிர்மறை யாகலான் மயங்காமை பெரும்பான்மை எனவே,
  

“உய்த்துக் கொண்டுணர்தல்”

(மரபு 110)
 

என்னும்     தந்திர   உத்தியான்   எடுத்தோதிய   காலமாகிய   முதற்பொருளும்,  பூவும்  புள்ளுமாகிய
கருப்பொருளும்  மயங்கியும்  மயங்காமையும்   வரும். எனவே,  உரிப்பொருள்  மயங்கிவராது  என்றவாறு.
மயங்கி வருதல் கலி முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டுகொள்க.
  

“ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ்
ஊசிபோகிய சூழ்செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகம் செஞ்சாந்து நீவி.”

(அகநா.48)
  

என்றவழி,  மருதத்திற்குக்  1கருப்பொருளாகிய   கழுநீரும்  குறிஞ்சிக்குரிய  வெட்சிப்பூவும்  அணிந்தோன்
என்றமையாற் கருப்பொருள் கருப்பொருள் மயக்கமாயிற்று, 2பிறவும் அன்ன.
  

நச்சினார்க்கினியர்
  

15. உரிப்பொரு. . . . . பெறுமே
  

இஃது எய்தாத தெய்துவித்தது3


1. கருப்பொருட்கு    மயக்கம்   எய்தாததை   இச்சூத்திரத்தான்   எய்து   வித்தலின்   எய்தாதது
எய்துவித்தலாயிற்று.
  

2. கழுநீர்  மாலையன்   செச்சை  (வெட்சி) க்கண்ணியன்  எனத்  தலைவன்  மருதக்  கருப்பொளும்
குறிஞ்சிக்   கருப்பொருளும்  கூறப்பட்டன.  இது குறிஞ்சித்திணை  யாதலின்  மருதக்கருப்பொருள்
வந்துமயங்கியதாகக் கொள்க.
  

3. கைக்கிளை பெருந்திணைகளுக்கு இதுவரை எய்தாத மயக்கம் எய்துவித்தது.