உம்மை எதிர்மறை யாகலான் மயங்காமை பெரும்பான்மை எனவே, |
“உய்த்துக் கொண்டுணர்தல்” |
(மரபு 110) |
என்னும் தந்திர உத்தியான் எடுத்தோதிய காலமாகிய முதற்பொருளும், பூவும் புள்ளுமாகிய கருப்பொருளும் மயங்கியும் மயங்காமையும் வரும். எனவே, உரிப்பொருள் மயங்கிவராது என்றவாறு. மயங்கி வருதல் கலி முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டுகொள்க. |
“ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ் ஊசிபோகிய சூழ்செய் மாலையன் பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குயமண் டாகம் செஞ்சாந்து நீவி.” |
(அகநா.48) |
என்றவழி, மருதத்திற்குக் 1கருப்பொருளாகிய கழுநீரும் குறிஞ்சிக்குரிய வெட்சிப்பூவும் அணிந்தோன் என்றமையாற் கருப்பொருள் கருப்பொருள் மயக்கமாயிற்று, 2பிறவும் அன்ன. |
நச்சினார்க்கினியர் |
15. உரிப்பொரு. . . . . பெறுமே |
இஃது எய்தாத தெய்துவித்தது3 |
1. கருப்பொருட்கு மயக்கம் எய்தாததை இச்சூத்திரத்தான் எய்து வித்தலின் எய்தாதது எய்துவித்தலாயிற்று. |
2. கழுநீர் மாலையன் செச்சை (வெட்சி) க்கண்ணியன் எனத் தலைவன் மருதக் கருப்பொளும் குறிஞ்சிக் கருப்பொருளும் கூறப்பட்டன. இது குறிஞ்சித்திணை யாதலின் மருதக்கருப்பொருள் வந்துமயங்கியதாகக் கொள்க. |
3. கைக்கிளை பெருந்திணைகளுக்கு இதுவரை எய்தாத மயக்கம் எய்துவித்தது. |