பக்கம் எண் :

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே சூ 15121

இது   நிலம்வரையாது   வந்த   கைக்கிளை.  இதனைக்  குறிஞ்சியுட்  கோத்தார்  புணர்ச்சி  யெதிர்ப்
பாடாகலின்.
  

“கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே யாய மகள்;”

  

“வளியா வறியா வுயிர்காலம் கொண்டு
நளிவாய் மருப்பஞ்சு நெஞ்சினார் தோய்தற்

கெளியவோ வாயமக டோள்;”

(கலி-103)
 

“அவ்வழி முள்ளெயிற்றேஎ ரிவளைப் பெறுமிதோர்
வெள்ளேற் றெருத்தடங்கு வான்;”

  

“ஒள்ளிழை, வாறாது கூந்தற் றுயில்பெறும் வைமருப்பிற்
காரி கதனஞ்சான் கொள்பவன்..........”

(கலி-104)
 

என்றாற்போல   ஏறுதழுவினாற்கு   உரியள்   இவளென  வந்த  கைக்கிளைகளெல்லாம்  முல்லைக்கலி
பலவற்றுள்ளுங் காண்க.
  

‘முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே’ (105) என்பதனான் அவை கைக்கிளையாயின.
  

இனி   ‘எழின்   மருப்   பெழில்வேழம்’  என்றது  முதலிய  நாலுபாட்டும்  ஏறிய  மடற்றிறமான  (51)
பெருந்திணை; என்னை?
  

“மாமேலே னென்று மடல்புனையா நீந்துவேன்
தேமொழி மாத ருறாஅ துறீஇய
காமக் கடலகப் பட்டு.”
 

(கலி-139)
 

என்றாற் போல்வன வருதலின்.
  

‘புரிவுண்ட     புணர்ச்சி’ என்றது முதலிய ஆறுபாட்டுந் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய (51)
பெருந்திணை  இவற்றை  நெய்தலுட்  கோத்தார்  சாக்காடு  குறித்த  இரங்கற் பொருட்டாகலின். கூனுங்
குறளும் உறழ்ந்து கூறும் பெருந்திணையும் ஊடற் பகுதியவாகலின் மருதத்துட் கோத்தார்.
  

“கல்லாப் பொதுவனை நீமாறு.” 

(கலி-112)
 

எனப் பொதுவியர் கூறலும்.