பக்கம் எண் :

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே சூ 15125

“. . . . . . புலிப்பகுவா யேற்றை
. . . . . . விடர்முகைக்
கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை
வாடுபூஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயருமாறே”

(குறுந்-343)
  

புலி     வேங்கைச் சினையிற் கிடக்கு  முயர்வரை  நாடாகவே’ நிலம்  குறிஞ்சி; நாடனொடு பெயர்தல்
கொண்டுதலைக்  கழிதலாமுரிப்பொருள்.  இன்னும்  “ஊஉரலரெழ” எனும்  பெருங்கடுங்கோவின்  பாட்டு
மதுவா தலறிக.”
  

‘. . . . . . . . . . . . . . . . . . . . . . .
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு
விண்டொட நிவதந் விலங்குமலைக் வகாற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்கழிற் றடிவழி நிலைஇய நீரே.”

(குறுந்-262)
  

இதில்   புணர்தற்குரிய   மலையிற்றலைவனுடன்  போகும்  தலைவி  களிற்றடிவழி  நிலைஇய  நீரைத்
தலைவனோடுண்ணுதலை விரும்பும் ஒழுக்கம் மயங்குதலறிக.
  

இனி கொண்டுதலைக்கழிதல்
  

“அன்னாய் வாழி வேண்டன்னை, நம் படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய, அவர்நாட்
டுவலைக் கூவற் கீழ்
மானுண் டெஞ்சிய கலுழி நீரே”

(ஐங்-203)
  

எனும்ஐங்குறுநூற்றுப்பாட்டில் குறிஞ்சி நிலத்தும்.
  

“ஒன்றானு நாம்மொழிய லாமோ செலவதான்
பின்றாது பேணும் புகழான்பின்-பின்றா
வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச்
செலற்கரிதாச் சேய சுரம்.”

(திணைமாலை 150 செய்-87)