பிரிவுக்கு பாலைக்கு உரித்தாமாறு மேற்சொல்லப்பட்டது. ‘ஏனைய மொழிந்த பொருளோ டொன்றவைத்தல்’ (மரபு-110) என்னும் தந்திர உத்தியால், புணர்தல் என்பது நெய்தற்கும், ஊடல் என்பது மருதத்திற்கும் பெரும்பான்மையும் உரித்தாகவும் சிறுபான்மை எல்லாப்பொருளும் எல்லாத் திணைக்கும் உரித்தாகவும்1 கொள்ளப்படும். இருத்தலாவது, தலைமகன் வருந்துணையும் ஆற்றியிருத்தல். இரங்கலாவது ஆற்றாமை. நச்சினார்க்கினியம். |
16. புணர்தல் பிரித. . . . . . பொருளே. |
இது மேனிறுத்த முறையானன்றியும் அதிகாரப்பட்டமை2 கண்டு உரிப்பொருள் கூறுகின்றது. உரிப்பொருள் உணர்ந்தல்லது உரிப்பொருளல்லன உணரலாகாமையின். |
இதன் பொருள் :- புணர்தலும் புணர்தனிமித்தமும், பிரிதலும் பிரிதனிமித்தமும், ஊடலும் ஊடனிமித்தமும் என்ற பத்தும் ஆராயுங்காலை ஐந்திணைக்கும்3 உரிப்பொருளாம் என்றவாறு. |
‘தேருங்காலை’ என்றதனாற் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும்’ பாலைக்குப் பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தற்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும், அவ்வந்நிமித்தங்களும் உரித்தென்று ஆராய்ந்துணர்க. இக்கருத்தே பற்றி ‘மாயோன் மேய’ (5) என்பதனுள் விரித்துரைத்தவாறுணர்க.4 |
1. ‘சிறுபான்மை...........................உரித்தாகவும்’ - இது உரிப்பொருள் மயங்காது என்ற இவரது கொள்கைக்கு மாறுபட்டது. |
2. மேல் நின்றமுறைமை - முதல்கருஉரி. கருப்பொருள் கூற உரிப்பொருள் கூறாது உரிப்பொருளை இங்குக் கூறக்காரணம் உரிப்பொருளல்லன மயங்கவும் பெறும் எனமுன் சூத்திரத் தொடர்பு காரணமாம். |
3. ஐந்திணை-ஐந்துநிலம் |
4. ‘இக்கருத்தே ....................உணர்க”-இக்கருத்தேபற்றி- உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் கருத்துபற்றி காடுறை உலகம் மைவரை உலகம் தீம்புனலுலகம் பெருமணலுலகம் ஆகியவற்றுக்கு முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனப் பெயருண்டு என்பதை நிரல் நிறையாக உய்த்துணர்ந்து கொள்ளல் வேண்டும். |