அகப்பொருளாவது புணர்ச்சியாகலானும் அஃது இருவர்க்கும் ஒப்ப நிகழ்தலானும் புணர்ச்சியை முற்கூறி, புணர்ந்துழியல்லது பிரிவின்மையானும் அது தலைவன் கண்ணதாகிய சிறப்பானுந் தலைவி பிரிவிற்குப் புலனெறி வழக்கு இன்மையானும் பிரிவினை அதன்பிற் கூறி, பிரிந்துழித் தலைவி ஆற்றியிருப்பது முல்லையாகலின் இருத்தலை அதன்பிற்கூறி, அங்ஙனம் ஆற்றியிராது தலைவனேவலிற் சிறிது வேறுபட்டிருந்து இரங்கல் பெரும்பான்மை தலைமகளதேயாதலின் அவ்விரங்கற் பொருளை அதன்பிற் கூறி, இந்நான்கு பொருட்கும் பொதுவாதலானுங்5 காமத்திற்குச் சிறத்தலானும் ஊடலை அதன்பிற் கூறி இங்ஙனம் முறைப்படுத்தினார். |
இனி, ஓதலும் பகையும் தூதும் (25) அவற்றின் பகுதியும் பொருட் பிரிவும் உடன்போக்கும் பிரிவு ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்தும்.................தோழியொடு வலித்தன்’ (41) முதலியன பிரிதனிமித்தம், பிரிந்தபின் தலைவி வருந்துவனவுந் தோழியாற்று வித்தனவும் பாலையாதலிற் பின்னொருகாற் பிரிதற்கு நிமித்தமாம். அவை பின்னர்ப் பிரிவிற்கு முன்னிகழ்தலின். |