பக்கம் எண் :

புணர்தல் பிரிதல் இருத்தல் சூ.16131

இக் குறுந்தொகை புணர்ந்துழி மகிழ்ந்து கூறியது.
  

“அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கட் 
பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குற்
றிருமணி புரையு மேனி மடவோள்
  
யார்மகள் கொல்லிவ டந்தை வாழியர்  
துயர முறீஇயின ளெம்மே யகல்வய
லரிவன ரரிந்துந் தருவனர் பெற்றுந்
தண்சேறு தாஅய் மதனுடை நோன்றாட்
கண்போ னெய்தல் போர்விற் பூக்குந்
திண்டேர்ப் பொறையன் றொண்டி
தன்றிறம் பெறுகவிவ ளீன்ற தாயே”      (நற்றிணை-8)
இந்நற்றிணையும் ‘முலையே முகிழ்முகிழ்த் தனவே’
என்னுங் குறுந்தொகையும் புணர்தனிமித்தம்.
  

“அன்றவ ணொழிந்தன்று முலையே வந்துநனி
வருந்தினை வாழியெ னெஞ்சே பருந்திருந்
துயாவிளி பயிற்றும் யாஅவுயர் நனந்தலை
யுறாடுடி மகுளியிற் பொருடெரிந் திசைக்குங்
கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்ற
மெம்மோ டியத்தலுஞ் செல்லாய் பின்னின்
றொழியச் சூழ்ந்தனை யாயிற் றவிராது
செல்லினிச் சிறக்கநின் னுள்ளம் வல்லே
மறவ லோம்புமதி யெம்மே நறவின்
சேயித ழனைய வாகிக் குவளை
மாயிதழ் புரையு மலிர்கொ ளீரிமை
யுள்ளகங் கனல வுஇளுதோ றுலறிப்
பழங்கண் கொண்ட கலிழ்ந்துவீ ழவிரறல்
வெய்ய வுகுதர வெரீஇப் பையெனச்
சில்வளை சொரிந்த மெல்லிறை முன்கைப்
பூவீ மொடியிற் புல்லெனப் போகி
யடர்செ யாகற் சுடர்துணையாக
வியங்காது வதிந்தருங் காதலி
யுயங்குசாய் சிறுபுற முயங்கிய பின்னே”.
  

(அகம்-19)