பக்கம் எண் :

132தொல்காப்பியம் - உரைவளம்

இது மறவலோம்புமதி யெனப்பிரிவு கூறிற்று.
  

“அறியாய் வாழி தோழி யிருளற
விசும்புடன் விளக்கும் விரைசெலற் றிகிரிக்
கடுங்கதி ரெறித்த விடுவாய் நிறைய
நெடுங்காய் முருங்கை வெண்பூத் தாஅய்
நீரற வறந்த நிரம்பா நீளிடை
வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளியங் காட்ட கத்திடை யுழிஞ்சி
லுள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரியரை புதைத்த புலம்புகொ ளியவின்
விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோ
ரெழுத்துடை நடுக லின்னிழல் வதியு
மருஞ்சுரக் கவலை நீந்தி யென்று
மில்லோர்க் கில்லென் றியைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காத
லருளே காதல ரென்றி நீயே.”   

  (அகம்-53)
 

இது பிரிதனிமித்தம். வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது.
  

“வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.” 
  

  (குறு-21)
 

இது பருவங்கண்டுழியும் பொய் கூறாரென்று ஆற்றியிருந்தது.
  

“அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை யிடைமகன் சென்னிச்
குடிய வெல்லாஞ் சிறுபசு முகையே.” 
  

  (குறு-221)
 

இது  பருவங்கண்  டாற்றாது  கூறியது.  இது  முல்லை  சான்ற  கற்பாயிற்று.  அவன்  கூறிய  பருவம்
வருந்துணையும் ஆற்றியிருத்தலின்.