‘மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா வளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிண ரூழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே.” |
(குறு.66) |
இது பருவமன்றென்று வற்புறுத்தலின் இருத்தனிமித்தமாயிற்று. |
‘தேம்படு சிமய’ என்னுங் களிற்றியானைநிரையும் இருத்தனிமித்தமாம். இக்காலம் வருந்துணையும் ஆற்றினாளெனத் தான் வருந்துதலின். |
“கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையு மொழியா தொருநின் னல்லது பிறிதியாது மிலனே யிருங்கழி மலர்ந்த கண்போ னெய்தற் கமழிதற் நாற்ற மமிழ்தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து பறைஇய கிளருந் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமா ரலவ பல்காற் கைதையம் படுசினை யெவ்வமொ டசாஅங் கடற்சிறு காக்கை காமர் பெடையொடு கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின் வெள்ளிருக் கனவு நள்ளென் யாமத்து நின்னுறு விழுமங் களைந்தோ டன்னுறு விழும நீத்துமோ வெனவே.” |
(அகம்-170) |
இவ் வகப்பாட்டு நெய்தல். இரங்கலுரிப்பொருட்டாயிற்று. |
“ஞாயிறு பட்ட வகல்வாய் வானத் தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த பிள்ளை யுள்வாய்ச் செரீஇய விரைகொண் டவையும் விரையுமாற் செலவே.” |
(குறு.92) |
இஃது இரங்கனிமித்தம். |
“தருக்கேம் பெருமநின் னல்கல் விருப்புற்றுத் தாழ்ந்தாய்போல் வந்து தகவில செய்யாது |