பக்கம் எண் :

134தொல்காப்பியம் - உரைவளம்

சூழ்ந்தவை செய்துமற் றெம்மையு முள்ளுவாய்
வீழ்ந்தார் விருப்பற்றக் கால்.”      

  (கலி-69)
 

இஃது ஊடல்.
  

பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
வடைகரை வேழம் வெண்பூப் பகருந்
தண்டுறை யூரன் பெண்டிர்
துஞ்சூர் யாமத்துந் துயிலறி யலரே.”  
  

  (ஐங்குறு-13)
 

இஃது ஊடனிமித்தம்.
  

பிறவும் வேறுபட வருவனவெல்லாம் அறிந்து இதன்கண் அடக்கிக் கொள்க.  

  (14)

பாரதியார்
  

16. புணர்தல்...........பொருளே
  

கருத்து:-   இச்சூத்திரம்  அகப்பொருட்  பகுதியிற்  சிறந்த  அன்பினைந்திணைக்கு  நேருரிமைகொண்ட
ஒழுக்க வகைகளை உணர்த்துகிறது.
  

பொருள்:-     புணர்தல்  பிரிதல்  இருத்தல்  இரங்கல்  ஊடலிவற்றின்  நிமித்த மென்றிவை - கூடுதல்,
பிரிதல்,    பிரிவிடையாற்றியிருத்தல்,    ஆற்றாதிரங்கல்,   புலவி   என்ற   ஐந்தும் அவற்றிற்கியைபுடைய
நிமித்தங்களுமே;      தேருங்காலைத்      திணைக்குரிப்பொருளே      -      ஆராயும்      பொழுது
அன்பினைந்திணையெனற்குச் சிறந்துரிய பொருள்களாம்.
  

குறிப்பு:-     இதில் ஈற்றேகாரம் தேற்றமாகும். முதல்கரு உரிப்பொருள்களனைத்தும் அகத்திணைப்
பகுதியாகவே  அமைத்துக்கோடல்  தவறன்றாயினும்  திணையென்பது  ஒழுக்கங்கண்ணிய  பேராதலால்
அன்பினைந்திணையெனற்குப்    புணர்தல்    பிரிதல்   முதலிய   தலைமக்கள்   ஐந்தொழுக்கங்களே
சிறப்புரிமையுடைய பொருள்களாகும் என்பதை இச்சூத்திரம் விளக்குகிறது.
  

நிமித்தமாவது  ஒவ்வோரொழுக்கத்தை  யடுத்து  முன்னும்  பின்னும்  முதலும்  முடிவுமாகத் தொடுத்து
அவ்வொழுக்கத்திற்கு