பக்கம் எண் :

136தொல்காப்பியம் - உரைவளம்

அகன்     ஐந்திணையொழுக்கம்   களவில்    இயற்கைப்புணர்ச்சியில்  தொடங்குதலின்  புணர்தல் முற்
கூறப்பட்டது.   புணர்ந்த   பின்   பிரிவு  நிகழ்தலின்   பிரிதல் அதன்பின் கூறப்பட்டது. இடந்தலைப்பாடு
பாங்கற்   கூட்டம்  தோழியர்  கூட்டம்  இரவுக்குறி  பகற்குறிக் கூட்டம் முதலிய நிகழ்வதற்கு இடைப்பட்ட
காலங்களிலும்    தலைவன்    ஒரு    வழித்   தணந்தபோதும்   வரைவிடை   வைத்துப்பொருள்  வயிற்
பிரியுங்காலத்தும்   தலைவன்  பிரிவைத்தலைவி   ஆற்றியிருத்தலின்  அதன்  பின் இருத்தல் கூறப்பட்டது.
ஆற்றியிருந்தும்  கால   நீடிப்பால்   வருத்தம்   உறலின்   அதன்பின்  இரங்கல் கூறப்பட்டது. பிரிந்தவன்
விரைந்து   வாராமையின்  அவன்  வந்து   சிறைப்புறத்தானாக   ஊடற்குறிப்பால்   இயற்பட மொழிதலும்
இயற்பழித்து மொழிதலும் நிகழ்தலின் அதன் பின் ஊடல் கூறப்பட்டது.
  

இனிக்கற்பொழுக்கத்தில்     தலைவனும்    தலைவியும்   இல்லிருந்து  மகிழ்ந்து  நல்லறம்  செய்தலின்
புணர்தலும்,   அறம்     செய்யப்     பொருள்   தேவையாதலின்   வேற்று  நாடு  சென்று  பொருளீட்ட
வேண்டுதலினாலும்   பரத்தை  ஓதல்  காவல்  தூதுபகை முதலிய காரணங்களினாலும் பிரிவு நேருமாதலின்
பிரிவும்,   பிரிந்தவன்   வருந்துணையும்   ஆற்றியிருத்தலும்,   ஆற்றாமை   மீதுர   இரங்கலும்,  அவன்
வந்தபோது   பரத்தமை   காரணமாகவோ   விரைவில்   குறித்த   காலத்தில்   வாராமை  காரணமாகவோ
இயல்பாகவோ  செயற்கையாகவோ   ஊடல்  கொள்ளுதலும்  நிகழுமாதலின் புணர்தல்  முதலியன முறையே
கூறப்பட்டன.
  

“ஊடுதல்     காமத்துக்கின்பம்  அதற்கின்பம்  கூடிமுயங்கப்பெறின்”  (குறள் 1330) என்றாங்கு ஊடலின்
முடிவு   கூடல்   ஆதலின்   ஊடலையடுத்துப்  புணர்தல்  அமைந்தது  சுழற்சி   முறையாகும்.  அதனால்
ஐந்திணையொழுக்கம்   ஊடலும்    கூடலுமாய்  அமைந்து  இன்பம்  செய்வதாம் என்பது இச்சூத்திரத்தால்
பெற வைத்தது அறிக.
  

‘தேருங்காலை’    என்றதால்  ஐந்திணையொழுக்கங்களை  வரிசைப்படுத்தும்போது ‘மாயோன் மேய’ (3)
என்னும்   சூத்திரத்து   பின்னர்   முல்லை   குறிஞ்சி மருதம் நெய்தல் எனவும் பின்னர்ப் பாலை என்பது
நடுவில்   இருப்பது   (4)   எனவும்   கூறியிருப்பினும்  இச்சூத்திரத்துக்  கூறியாங்குப்  புணர்தல்  பிரிதல்
முதலியவாகவே