பக்கம் எண் :

138தொல்காப்பியம் - உரைவளம்

யாக்கிப்     பொதுப்பட  நின்றது   எனவுமாம்.2  ஓரிடத்து  என்றமையான்,  மேற்சொல்லப்பட்ட  ஐவகை
உரிப்பொருளும்    போல்   எல்லாத்   திணைக்கும்   பொதுவாகி  வருதலன்றி, கொண்டு  தலைக்கழிதல்
பாலைக்கண்ணும்.  பிரிந்தவன்  இரங்கல்  பெருந்திணைக்  கண்ணும் வரும் என்று கொள்க. கொண்டுதலைக்
கழிதலாவது உடன் கொண்டு பெயர்தல்,  அது,  நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமையானும், உடன
கொண்டு பெயர்தலின் பிரிதலின் அடங்காமையானும்  வேறு ஓதப்பட்டது. பிரிந்தவன்   அடங்காமையானும்,
வேறு   ஓதப்பட்டது. பிரிந்தவன்  இரங்கலாவது, ஒருவரை   ஒருவர்  பிரிந்த   இடத்து   இரங்கல். அது,
நெட்டாறு  சென்றவழி இரங்குதல்  இன்மையானும்ஒருவழித்  தணந்த  வழி4  ஆற்றுதலின்றி  வேட்கை
மிகுதியால் இரங்குதலானும், வேறு ஓதப்பட்டது. ஏறிய மடற்றிறமும் தேறுதல் ஒழிந்த காமத்து   மிகுதிறமும்
முதலாயின  பொருள்.  இது  பெருந்திணைக்கு உரித்து5. (இடத்தான் என்பது வேற்றுமை  மயக்கம் ஏகாரம்
ஈற்றசை) (17)
  

நச்சினார்க்கினியர்
  

17. கொண்டுதலைக் .............................தான.
  

இது முற்கூறிய ஐந்தனுட் பாலைக்கட் குறிஞ்சி மயங்குமாறும் நெய்தன் மயங்குமாறுங் கூறுகின்றது.  


2. இல்   என்பதன்   மறுதலை  உண்டு என்பதும் ஆம் இந்த ‘உண்டு’ என்பது ஐம்பால் மூவிடத்துக்கும்
பொதுச்சொல். ஆதலின் கழிதலும் இரங்கலும் உண்டு எனக் கொள்ளினும் ஆம்.
  

3. நெட்டாறு-நெடியவழி.  நெட்டாறு   சென்ற  வழி   இரங்குதலாவது  ஓதல் தூது  பொருள்  முதலிய
காரணமாக  வேற்றுநாடு சென்றவழி இரங்குதல். அதுவே ஐந்திணையுள் இரங்கல் என்று கூறப்பட்டதாம்.
ஒருவழித்தணத்தலால்  வரும்  இரங்கல்  எதன்பாற்படும்  எனின்  அதுவும்  இரங்கலின்  (நெய்தலின்)
பாற்படும் என்பது இதனாற் கூறப்பட்டது.
  

4. ஒருவழித் தணத்தல்-களவில் தலைவன் தலைவியை ஒரு சிலநாள்கள் பிரிந்திருத்தல்.
  

5. சிவலிங்கனார் விளக்கம் பார்க்க.