பக்கம் எண் :

கொண்டுதலைக் கழிதலும் சூ.17141

‘வானமூர்ந்த’ என்னும் அகப்பாட்டினுள்,

“மெய்புகு வன்ன கைகவர் முயக்க
மலரும் பெறுகுவர் மன்னே.”

  

எனக் கூறி, அழுதன் மேவலவாய்க் கண்ணுந் துயிலுமெனஇரங்க மீக்கூறியவாறு முணர்க.
  

‘குறியன்ன’ என்னும் அகப்பாட்டும் அது.
இவை பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்தது.
  

இங்ஙனம்    இச்சூத்திர   விதி  உண்மையிற்   சான்றோர்.  அகத்தினுங்  கலியினும்  ஐங்குறுநூற்றினும்
பாலைக்கண்ணே உடன் போக்கு நிகழ்ந்த செய்யுட்களைத் கோத்தாரென்றுணர்க.
  

இல்லிருந்து     செந்தீயோம்பல்   வேளாளர்க்கு    இன்மையிற்    கொண்டுதலைக்கழிதல்   அவர்க்கு
உரியதாயிற்று,   ஒழிந்த  மூன்று  வருணத்தோருள் தமக்குஉரிய  பிரிவின்கட் செந்தீயோம்பு வாரை நாட்டிப்
பிரிப;   ஆகலான்,   அவர்க்கு   ஏனைப்   பிரிவுகள்   அமைந்தன.   இதனைக் ‘கொடுப்போ  ரின்றியுங்
கரணமுண்டே  (143)   எனக்கற்பியலிற்   கரணம்  வேறாகக்கூறுமாறு ஆண்டுணர்க ‘வேர்முழு துலறி நின்ற’
என்றும் மணிமிடை பவளத்துள்.
  

‘கூழுடைத் தந்தை யினுடைய வரைப்பி
னூழடி யொறுங்கினு முயங்கும்’

  

எனவும், ‘கிளியும் பந்தும்’ என்னும் களிற்றியானை நிரையுள்,
  

‘அல்குபத மிகுந்த கடியுடை வியனகர்’
  

எனவும், நெல்லுடைமை கூறிய அதனானே வேளாண் வருணமென்பது பெற்றாம்.        

  (15)

பாரதியார்
  

17. கொண்டுதலை.........................தான.
  

கருத்து:-    இதுமேலைச்  சூத்திரத்தில்  திணைக்குரிப்  பொருளென விளக்கிய ஐந்தனுளடங்காதனவாய்த்
தம்மியல்  பால்   அகத்திணைக்களுக்குரிப்   பொருள்களாய்   ஆட்சிபெறும்   பிற  சிலவும்  உண்டெனக்
கூறுகிறது.