என்றது, முன்னர்க் குறிஞ்சி பாலைக்குரிய இருவகை வேனிற் கண் நிகழ்ந்தாற்போல இவையும் இருவகை வேனிற்கண் நிகழுமென்றவாறு, மழைகூர் காலத்துக் புறம்போந்து விளையாடுதலின்மையின் எதிர்ப்பட்டுப் புணர்தல் அரிதாகலானும், அது தான் இன்பஞ் செய்யாமை யானும் இருவகை வேனிற் காலத்தும் இயற்கைப் புணர்ச்சிநிகழுமென்றது இச்சூத்திரம். |
முன்னர்க் கூதிரும் யாமமும் முன்பனியுஞ் சிறந்ததென்றது இயற்கைப் புணர்ச்சிப் பின்னர்க் களவொழுக்கம் நிகழ்தற்குக் காலமென்றுணர்க. அது. |
“பூவொத் தலமருந் தகைய வேவொத் தெல்லாரு மறிய நோய்செய் தனவே தேமொழித் திரண்ட மென்றோன் மாமலைப் பரீஇ வித்திய வேனற் குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே” |
(குறு-72) |
“எனவரும். இக்குறுந்தொகையுட் குரீஇ யோப்புவாள் கண்ணென வழி நிலைக் காட்சியைப் பாங்கற்குக் கூறினமையின் அத்தினைக்கதிர் முற்றுதற்கு உரிய இளவேனிலும் பகற்பொழுதுங் காட்சிக்கண் வந்தன. |
‘கொங்குதேர் வாழ்க்கை’ என்பதும் இளவேனிலாயிற்று. தும்பி கொங்கு தேருங் காலம் அதுவாகலின். |
கலத்தலுங் காட்சியும் உடனிகழுமென்றுணர்க. கலத்தலின்றிக் காட்சி நிகழ்ந்ததேல், உள்ளப்புணர்ச்சியே யாய் மெய்யுறு புணர்ச்சியின்றி வரைந்துகொள்ளு மென்றுணர்க. |
பாரதியார் |
18. கலந்த.............................அன்ன |
கருத்து:- இதுவும், ஐந்திணை வகுப்பில் அடங்காதனவாய் அகப்பகுதியில் உரிப்பொருள் ஆவன இன்னுஞ் சிலவற்றைக் கூறுகின்றது. |
பொருள்:- கலந்த பொழுதும் - ஒத்த தலைமக்கள் தம்மிடைப் பாலதாணையின் முதல் எதிர்ப்பாட்டில் நிகழ்வும். (கலந்த) காட்சியும் - அவ்வாறு தலைப்பட்டார் தம்முள் அறிவுடம் படுத்தற்குக் கூட்டிக் குறிப்புரைக்கும் நாட்டமும்; அன்னமேலைச் சூத்திரத்திற்கு கூறியதுபோல) ஏற்புழி அகவொழுக்கத்திற்கு உரிப்பொருளாதற் குரியவாகும். |