பக்கம் எண் :

முதல்எனப் படுவ ஆயிரு வகைத்தே சூ.19151

கண்டேம்   எனக்கூறுதலும்  உள்ள  இலக்கியங்களே  காணப்படுகின்றன.  நற்றாய்  சுரவழிச்சேறல் இல்லை.
உடன்போய   இருவரையும்  தாயர்  காண்டல்  இல்லை.  பிள்ளையவர்கள் அதனால் சிறுபான்மை காண்டல்
உண்டு என்றார். இது இலக்கணம் இல்லை; அவர் கூற்றுப் பொருந்தாது.
  

19.  

முதல்எனப் படுவது ஆயிரு வகைத்தே (19)

  

ஆ.மொ.இல.
  

The division said to be ‘Muthal’ is of two kinds.
  

பி.இ.நூ.
  

நம்பி 8
  

நிலமும் பொழுதும்என முதல் இரு வகைத்தே.
  

இல.வி.அ.9  -  -
  

  

இளம்பூரணர்
  

19. முதல்எனப்........................வகைத்தே
  

இதுவும்1, ஐயம் அறுத்தலை நுதலிற்று.
  

(இ-ள்)  முதல்  எனப்படுவது  -  மேல்  எடுத்தோதப்பட்டவற்றில்  முதல் என்று சொல்லப்படுவது, அ
இருவகைத்து - நிலமும் காலமும் ஆகிய அவ்விருவகையை உடையது.
  

எனவே,    ஏனையவெல்லாம்2 உரிப்பொருள் என்றவாறாம்.  இதனாற்  பெற்றது என்னை எனின், முதல்
கரு  உரிப்பொருள்  என  அதிகரித்து   வைத்தார்;   இனிக்   கருப்பொருள்  கூறுகின்றார்; உரிப்பொருள்
யாண்டுக் கூறினார் என ஐயம் நிகழும்; அது  


1. இதுவும்    என்ற    உம்மை    இறந்தது    தழீஇயது    கொண்டு    தலைக்கழிதல்    முதலியன
எத்திணையைச்சாரும்  என்ற  ஐயத்தை  அகற்றியது போல இச்சூத்திரமும் ஓர் ஐயத்தை அகற்றுதலின்
என்க.
  

2. ஏனைய   எல்லாம்  என்றது   நிலமும் பொழுதும் வரையறை செய்யாத சூத்திரங்களில் கூறப்பட்டன
எல்லாம்