பக்கம் எண் :

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை சூ.20157

ஐவனமும்4  வெதிர்  நெல்லும்5.  மா - யானையும்,  புலியும்,  பன்றியும்,  கரடியும் -  மரம் - வேங்கையும்
கோங்கும்,   புள்   -   மயிலும்    கிளியும்.    பறை    வெறியாட்டுப்   பறையும்,  தொண்டகப்பறையும்
செய்தி-தேனழித்தல்.   பண்-குறிஞ்சி.  பிறவும்  என்றதனால்  பூ-வேங்கைப்பூவும்,  காந்தட் பூவும், குறிஞ்சிப்
பூவும், நீர்-சுனை நீரும். அருவி நீரும் பிறவும் அன்ன.
  

பாலைக்கு நிலம் ஒதாது வேனிற்காலமும் நண்பகலும் ஓதினமை யானும்,
  

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்.”

  

(சிலப்-காடுகாண்-64-66)
  

எனப்     பிறசான்றோர்  செய்யுள்  அகத்து  வருதலானும்,  இந்  நிலங்களில்  வேனிற் காலத்து நிகழ்வன,
கருப்பொருளாகக்   கொள்ளப்படும்.   தெய்வம் - கொற்றவை,  உணவு-ஆறலைத்தலான்6  வரும் பொருள்.
மா-வலியழிந்த  யானையும்,   வலியழிந்த   புலியும்   வலியழந்த  செந்நாயும் - மரம் - பாலை,  இருப்பை.
கள்ளி,   சூரை -  புள் -  எருவையும்,  பருந்தும் -  பறை - ஆறலைப்பறையும், சூறைகொண்ட பறையும்,
செய்தி  -  ஆறலைத்தல்பண் -  பாலை,  பிறவும்  என்றதனால், - பூ - மராம்பூ  நீர் - அறுநீர்க் கூவலும்7
அறுநீர்ச் சுனையும், பிறவும் இந்நிகரன கொள்க.
  

மருதத்திற்குத்   தெய்வம்   இந்திரன்;  ‘தீம்புனல்  உலகம்’  (அகத்-5)  எனவும்  ‘வைகறை  விடியல்’
(அகத்-9) எனவும், ஓதினமையால், அவ்விடத்தினும் காலத்தினும் நிகழ்பவை கொள்க.  


4. ஐவனம்-ஒருவகை நெல்.  

5. வெதிர் நெல் - மூங்கில் நெல்.  

6. ஆறு அலைத்தல்-வழிப்போவாரைத் துன்புறுத்தல்  

7. அறு நீர்க் கூவல்-நீர் அற்றகிணறு