158 | தொல்காப்பியம் - உரைவளம் |
உணவு - நெல், மா - எருமையும், நீர் நாயும் - மரம் - மருதும் காஞ்சியும். புள் - அன்னமும், அன்றிலும் - பறை - நெல்லரி பறை. செய்தி - உழவு - பண் - மருதம், பிறவும் என்றதனால், பூ - தாமரையும் கழுநீரும். நீர் ஆற்றுநீரும் பொய்கை நீரும் பிறவும் அன்ன. | நெய்தற்குத் தெய்வம் வருணன் ‘மணல் உலகம்’ (அகத்-5) என்றதனானும், ‘எற்பாடு’ (அகத்-10) என்றதனானும், ஆண்டு நிகழ்பவை கொள்க. உணவு - உப்பு விலையும் மீன்விலையும் மா-கராவும்8 சுறவும், மரா - புன்னையும் கைதையும்9.புன்-கடற்காக்கை, பறை - நாவாய்ப் பறை. செய்தி - மீன்படுத்தலும் உப்பு விளைத்தலும், பண் - செவ்வழி பிறவும் என்றதனால், பூ - நெய்தல், நீர் - கேணி நீரும் கடல் நீரும், பிறவும் அன்ன. | நச்சினார்க்கினியர் | 20 தெய்வ முணாவே................மொழிப. | இது நிறுத்த முறையானே யன்றி அதிகாரப்பட்டமையின் உரிப்பொருள் கூறி ஒழிந்த கருப்பொருள் கூறுதல் நுதலிற்று. | இதன் பொருள்:- தெய்வம் உணாவே மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ - எல்லாத் திணைக்குந் தெய்வம் உணா விலங்கு மரம் புள்ளும் பறை தொழிலென்று இவற்றை யாழின் கூற்றோடே கூட்டி, அவ்வகை பிறவும் கரு என மொழிப-அவை போல்வன பிறவுங் கருவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. | ‘யாழின்பகுதி’ என்றதனான்10 மற்றையபோலாது பாலைக்குப் |
| 8. முதலை | 9. தாழை | 10. உணா, மா, மரம் புள் என வாளா கூறியதுபோல் யாழ் எனக் கூறாது யாழின் பகுதி என்றதனால் |
|
|