இன்பப்பகுதி கூறினாராம் அஃதேல், பிற நூலாசிரியர்9 விரித்துக் கூறினாற்போல அறமும் பொருளும் விரித்துக் கூறாதது என்னையோவெனின், உலகத்தில் நூல் செய்வார் செய்கின்றது, அறிவிலாதாரை அறிவு கொளுத்த வேண்டியன்றே; யாதானும் ஒரு நூல் விரித்தோதிய பொருளைத் தாமும் விரித்து ஓதுவாராயின், ஓதுகின்றதனாற் பயன் இன்றாமாதலால், முன்னூலாசிரியர் விரித்துக் கூறின பொருளைத் தொகுத்துக் கூறலும், தொகுத்துக் கூறின பொருளை விரித்துக் கூறலும் நூல் செய்வார் செய்யும் மரபு என்று உணர்க. அஃதேல் இந்நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின், காமப் பகுதியும் வீரப் பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆகலானும், பொருளானே அறஞ்செய்யும் ஆகலானும், இன்பமும் பொருளும் ஏற்றம்10 என ஓதினார் என உணர்க. | அஃதற்றாக, இது பொருளதிகாரமாயின், உலகத்துப் பொருள் எல்லாம் உணர்த்தல் வேண்டுமெனின், இதுமுதல், கரு, உரிப்பொருள் எனத்தொகை நிலையான் அடங்கும். அவ்வாறு வகுக்கப்பட்ட பொருளை உறுப்பினாலும், தொழிலினாலும் பண்பினாலும் பாகுபடுத்தி நோக்க வரம்பிலவாய் விரியும். இக்கருத்தினானே இவ்வாசிரியர் உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் முதல் கரு உரிப்பொருள் என ஓதினார் என உணர்க. | அஃதற்றாக, இவ்வதிகாரத்துள் உரைக்கின்ற பொருளை யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், முற்பட இன்பப் பகுதியாகிய கைக்கிளை முதலாகப் பெருந்திணை ஈறாக அகப் பொருள் இலக்கணம் உணர்த்தி, அதன் பின் புறப்பொருட் பகுதியாகிய வெட்சி முதலாகப் பாடாண்டினை ஈறாகப் புறப்பொருள் இலக்கணம் உணர்த்தி, அதன்பின் அகப் பொருட் பகுதியாகிய களவியல் கற்பியல் என இரண்டு வகைக் கைகோளும் உணர்த்தி, அதன்பின் அகம் புறம் என இரண்டினையும் பற்றிவரும் பொருள் இயல்பு உணர்த்தி, அதன்பின் அவ்விரு பொருட்கண்ணும் குறிப்பும்பற்றி நிகழும் மெய்ப்பாடு உணர்த்தி, |
9. பிறநூலாசிரியர் : பிற்காலத்திருவள்ளுவர், நீதிநூலார்* 10. இன்பமும் அதற்குரிய முதல் கரு உரிப் பொருளும் சிறப்பாவன. |
|
|