160 | தொல்காப்பியம் - உரைவளம் |
தேன் அழித்தலுங் கிழங்கு அகழ்தலுந் தினை முதலியன விளைத்தலுங் கிளி கடிதலும்; யாழ், குறிஞ்சியாழ் பிறவுமென்றதனால், பூ காந்தளும் வேங்கையுஞ் சுனைக்குவளையும்; நீர் அருவியுஞ் சுனையும்; ஊர், சிறுகுடியுங் குறிச்சியும். | மருதத்திற்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும்; மா, எருமையும் நீர் நாயும்; மரம், வஞ்சியுங் காஞ்சியும் மருதமும்; புள், தாராவும் நீர்க்கோழியும்; பறை, மணமுழவும் நெல்லரி கிணையும்; செய்தி, நடுதலுங் களைகட்டலும் அரிதலுங் கடாவிடுதலும்; யாழ், மருதயாழ், பிறவுமென்றதனால், பூ, தாமரையுங் கழு நீரும்; நீர், யாற்றுநீரும் மனைக்கிணறும் பொய்கையும்; ஊர், ஊர்களென்பனவேயாம் | நெய்தற்கு உணா, மீன்விலையும் உப்புவிலையும்; மா, உமண்பகடு போல்வன; முதலையுஞ் சுறாவும் மீனாதலின் மாவென்றல் மரபன்று. மரம், புன்னையும் ஞாழலுங் கண்டலும்; புள், அன்னமும் அன்றிலும் முதலியன; பறை, மீன் கோட்பறை, செய்தி, மீன்படுத்தலும் உப்பு விளைத்தலும் அவை விற்றலும்; யாழ், நெய்தல்யாழ் பிறவு மென்றதனால், பூ, கைதையும் நெய்தலும்; நீர்; மணற்கிணறும் உவர்க்குழியும்; ஊர், பட்டினமும் பாக்கமும். | இனி பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறை கொண்டனவும்; மா, வலியழிந்த யானையும் புலியுஞ் செந்நாயும்; மரம், வற்றின இருப்பையும் ஓமையும் உழிஞையும், ஞெமையும் புள், கழுகும் பருந்தும் புறாவும்; பறை, சூறை கோட் பறையும் நிரைகோட் பறையும்; செய்தி, ஆறலைத்தலுஞ் சூறைகோடலும் யாழ், பாலையாழ், பிறவுமென்றதனால், பூ, மராவுங் குராவும் பாதிரியும்; நீர், அறுநீர்க்கூவலுந் சுனையும்; ஊர், பறந்தலை. | இன்னும் பிறவு மென்றதனானே இக்கூறியவற்றிற்குரிய மக்கள் பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க. அவை ‘பெயரும் வினையும்’ (20) என்னுஞ் சூத்திரத்துட் காட்டுதும். பிறவுமென்றதனால் கொள்வன சிறுபான்மை திரிவுபடுதலின் பிறவுமென்று அடக்கினார். |
|
|