பக்கம் எண் :

எந்நில மருங்கின் பூவும் புள்ளும் சூ.21163

முற்கூறிய    மரத்திற்குச்    சினையாய்    அடங்கிற்று.   ஒன்றென  முடித்தலான்  நீர்ப்பூ  முதலியனவும்
அடங்கும்.5 இங்ஙனம் வருமிடஞ் செய்யுளிடமாயிற்று. 

உதாரணம் :-

  

“தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்.”   

  (கலி-52)
 

இது மருதத்துப்பூ, குறிஞ்சிக்கண் வந்தது.
  

“உடையிவ ளுயிர் வாழா ணீநீப்பி னெனப் பல
விடைகொண்டியா மிரப்பவு மெமகொள்ளா யாயினை
கடைஇய வாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை
யடையொடு வாடிய வணிமலர் தகைப்பன.”

  (கலி-3)

இது மருதத்துப்பூ, பாலைக்கண் வந்தது.
  

“கண்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத்
தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க
வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற
வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும்
     விரும்பார்கொல்.”    
  

  (கலி-27)

இது     குறிஞ்சிக்குப்  பயின்ற  மயில்  பாலைக்கண்  இளவேனிற் கண் வருதலிற்  பொழுதொடு புள்ளு
மயங்கிற்று.   கபிலர்  பாடிய   பெருங்குறிஞ்சியில்   வரைவின்றிப்   பூ  மயங்கியவாறு  காண்க. ஒன்றென
முடித்தலாற் பிற6 கருப்பொருள் மயங்குவன உளவேனுங் கொள்க (19)
  

பாரதியார்
  

21. எந்நில..........பயந்தவாகும்
  

கருத்து: இது கருப்பொருண் மயக்கமும் கடிதலில்லை யென்பது கூறுகின்றது.
  

பொருள்:  எந்நில  மருங்கிற்  பூவும்  புள்ளும்  -  எந்த  நிலச்  சார்பில் கூறப்படும் பூ, புள் முதலிய
கருப்பொருள்களும் அந்நிலம் பொழுதொடு வாராவாயினும்-அவ்வக் கருப்பொருட்டுச் சிறந்துரிய  


5. நீர்ப்பூ, கொடிப்பூ முதலியனவும் அடங்கும்
  

6. பூவும் புள்ளு மல்லா மா மரம் முதலியன.