பக்கம் எண் :

172தொல்காப்பியம் - உரைவளம்

கூறி     மயங்கவைத்தார்.  ஆரியருள்  நான்கு  வருணத்தாருக்குமே  தமிழரின்  அகத்திணைக்  களவியல்
ஒழுக்க   ஆட்சியுரிமை   அவர்   தம்   தரும  சாத்திரங்களிலும் வழக்கிலும் இன்மையானும் ஆரிய தரும
நூல்கள்   கூறும்   உயர்பிறப்   புரிமையுடைய   இடையிருவருணத்தார்   தமிழகத்தென்றுமில்லாமையானும்,
இவருரைகள்   பொருந்தாமை   யறிக.   அன்றியும்,   தமிழிலக்கண  நூல்  “........................வண்புகழ்  மூவர்
தண்பொழில்  வரைப்பில்  நாற்பெயரெல்லையகத்தவர்  வழங்கும்  யாப்பின் வழியது” எனத் தொல்காப்பியர்
தாமும்   “வடவேங்கடந்   தென்குமரியாயிடைத்   தமிழ்கூறும்  நல்லுலகத்து  வழக்குஞ் செய்யுளும் ஆயிரு
முதலின்   எழுத்துஞ்  சொல்லும்  பொருளும்  நாடி,  செந்தமிழியற்கை  சிவணிய  நிலத்தொடுமுந்து  நூல்
கண்டு   முறைப்பட   எண்ணிப்   புலந்தொகுத்தோனே...................தொல்காப்பியன்”  எனத் தொல்காப்பியரின்
பாயிரமும்  வற்புறுத்துவதானும்,  இங்குத்  தொல்காப்பியரின்  சூத்திரங்கள் குறிப்பன எல்லாம் ஆரியவருண
அறங்களையல்ல.   தமிழ்   மரபும்   தமிழர்   வழக்கங்களுமே   யாமென்பது  தேற்றம்,  இவ்வுண்மைகள்
இனிவருஞ் சூத்திரங்களுக்கும் ஒக்கும். (20)
  

சிவலிங்கனார்
  

அகன்ஐந்திணைப்     பாடல்களில்   வரும்   தலைவன்   தலைவியர்ப்   பெயர்கள்  அவர்தம்  இயற்
பெயர்களாற்   சுட்டிக்கூறப்பெறா   என்று   இவ்வியலின்   இறுதியில்   ஆசிரியர்  கூறுவர்.  அப்படியானால்
அவர்கள் எப்பெயரால் கூறப்படுவர் என்பதற்கு விடையாக இச்சூத்திரம் அமைந்தது.
  

நிலத்தின்   அடிப்படையிலும்    நிலத்தில்    ஆற்றும்   தொழிலின்  அடிப்படையிலும்  அப்பெயர்கள்
அமையும். அப்பெயர்கள் திணைதொறும் மரீஇய திணை நிலைப்பெயர்களாம்.
  

திணைதொறும்     மரீஇய  திணை  நிலைப்பெயர்  என்பதைத்  திணைதொறும் மரீஇய பெயர் என்றும்
திணைநிலைப்பெயர்   என்றும்   இரண்டாகக்   கொண்டு  திணைதொறும்  மரீஇய பெயராவது குலப்பெயர்;
அதற்குதாரணம் குன்றவர் என்றும் திணை நிலைப்பெயராவது உரிப்பொருளுக்கேற்பவரும் பெயர்