இன்னும் ‘ஏனலு மிறங்குகதி ரிறுத்தன’ என்னும் அகப்பாட்டினுள் ‘வானிணப் புகவிற் கானவர் தங்கை’ எனவும் ‘மெய்யீற்றீரா’ என்பதனுள் ‘வேட்டுவற் பெறலோடமைந்தனை' எனவும் வருவனவும் பிறவுங் கொள்க. வேட்டு என்னுந் தொழிலுடையானை வேட்டுவனென்றலிற் குறிப்பு வினைப்பெயர். |
“குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி வளையன் முளைவா ளெயிற்ற ளிளைய ளாயினு மாரணங் கினளே.” |
(ஐங்குறு-256)
|
இது வருத்தும் பருவத்தளல்லள் என்ற தோழிக்குக் கூறியது. இப்பத்தினுள் ‘குறவன்...................மகள்’ எனக் கூறுவன பல பாட்டுக்கள் உள; அவையுங் கொள்க. இவ்வாற்றான் இந்நிலத்து மக்கள் பெயரும் பெற்றாம். ஏனைய பெயர்களில் வந்த னவுளவேற் கொள்க. |
பாரதியார் |
23. ஆயர்....................உளரே |
கருத்து:- இது மேற்சூத்திரத்திற் கூறிய திணை நிலைப்பெயர் வகைகளும் அப்பெயருடையாரின் அகத்திணைக்குரிமையுங் விளக்குகிறது. |
பொருள்:- ஆயர் வேட்டுவர் ஆடூஉத்திணைப் பெயர் - ஆயர் வேட்டுவர் என்பன ஆண்பால் சுட்டும் முல்லை நில மக்களின் திணைநிலப் பெயர்களாம்; ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே-அந்நிலத்து அகத்திணைக்குரிமை கொள்பவரும் உளராம். |
குறிப்பு:- ஈற்றேகாரம் அசைநிலை. |
ஆயர் என்பது முல்லை நில மக்களுக்குத் திணைப் பெயராகும் அதுவேபோல், வேட்டுவர் என்பதும் முல்லை நில மக்கட் பெயரென்று இளம்பூரணரும், குறிஞ்சி நில மக்கட் பெயரென்று நச்சினார்க்கினியரும் கூறுவர். இவருள் இளம்பூரணர் கூற்றுப்பொருட் சிறப்புடையது “மாயோன் மேய” என்னும் முன் 5 ஆஞ் சூத்திரத்தில் திணை நிலங்களில் முதலில் வைத்தெண்ணிய |