பக்கம் எண் :

ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப்பெயர் சூ.23179

3. யாரிவன் என்னை விலக்குவான்? நீருளர்
பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க்
கல்லாப் பொதுவனை! நீமாறு, நின்னொடு
சொல்லல் ஒம்பென்றார் எமர்.” 

  

  (முல்லைக்கலி-12)
 

இவற்றால் முல்லை நிலத்தில் ஆயர் அகவொழுக்கத்தலை மக்களாதற் குரியரென்பது தெளிவு.
  

“சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
கொலைவில் எயினர் தங்கை நின்முலைய
சுணங்கென நினைதி நீயே;
அணங்கென நினையுமென் னணங்குறு நெஞ்சே”
  

(ஐங்குறு-363)
  

என்னும்  ஐங்குறு   நூற்றுப்பாட்டால்,  முல்லை  நிலத்தில்  வேட்டுவத்  தொழிலுடைய எயினர் தங்கை
தலைமகளாதலறிக.
  

இனி,   “என்னுள்  வருதியோ  நன்னடைக்கொடிச்சி”  என்னும்  நற்றிணை  82-ஆம்  பாட்டில்  வரும்
அம்மள்ளனார் செய்யுளடியும்,
  

“உறுகழை நிவப்பிற் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி
விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே”

  

என்னும்    நற்றிணை    204-ஆம்   பாட்டில்   மள்ளனார்   கூறும்   அடிகளும்   குறிஞ்சிக்குறத்தி
தலைமகளாதற்கு மேற்கோள். அவ்வாறே.
  

“மீனெறி பரதவர் மடமகள்
மானமர் நோக்கங் காணாவூங்கே.”

  

என்னும் வெள்ளியந்தின்னனார் நற்றிணை 101-ஆம் பாட்டடிகளும்,
  

  

“முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகள்
... ... ... ... ... ... ... ... ... .. ...
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட் டனளே”.

  

என்னும் நற்றிணை 207-ஆம் பாட்டடிகளும்
  

நெய்தற் பரத்தி தலை மகளாதற்கு மேற்கோளாம்.