இது வரைதற் பொருட்டுத் தலைவி வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி சிறைப்புறமாகக் கூறியது. |
“அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லைக் குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே யிதற்கிது மாண்ட தென்னா ததற்பட் டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்ச மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை நுண்வலைப் பரதவர் மடமகள்3 கண்வலைப் படூஉங் கான லானே.” |
(குறுந்-184) |
இது கழறிய பாங்கற்குக் கூறியது. |
“கடுந்தே ரேறியுங் காலிற் சென்றுங் என்னினை யுங்கொல் பரதவர்மகளே.” |
(நற்றிணை-349) |
இது நற்றிணை. |
‘இவளே, கான ணண்ணிய’ என்னும் நற்றிணைப் பாட்டினுள், ‘கடுந்தேர்ச் செல்வன் காதன் மகனே’ என்றது அருமை செய்தயர்த்தலின் அவனை இகழ்ச்சிக்குறிப்பால் தலைமையாகக் கூறினாள். ஏனைப் பெண் பெயர்க்கண்4 வருவனவும் வந்துழிக் காண்க. |
‘ஏனோர் பாங்கினும்’ எனப் பொதுப்படக்கூறிய அதனான் மருத நிலத்து மக்களுள் தலைமக்கள் உளராகப் புலனெறி வழக்கஞ் செய்த செய்யுட்கள் வந்தன உளவேற் கண்டு கொள்க.5 |
|
3. பரதவர் மடமகள் - நெய்தல் திணைநிலைப்பெயர் |
4. நுளைச்சியர் போல்வன. |
5. இதனால்தான் உரையில் ஏனோர் என்பதற்கு மருதத்தை விட்டுப் பாலை நெய்தல் என இரண்டே கூறினார். |