பக்கம் எண் :

ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை சூ 24197

(1) குறிஞ்சிநில மக்கள் தலைமக்களாதற்கு
  

(அ) “யானை யுழலு மணிகிழர் நீள்வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்;
எனலு ளைய வரவுமற் றென்னைக்கொல்?
காணினுங் காய்வ ரெமர்.”  
  

  (திணைமொழி-6)
 

இதில், கானக்குறத்தி தலைவியாவதைக் காண்பாம்.
  

(ஆ) “குன்றக் குறவன் காதல் மடமகள்”   

(ஐங்குறு-256)
  

எனுங் கபிலர் குறுநூற்றடியுமது.
  

குறத்தியர் தலைமகளிராகச் சுட்டும் பிற பாட்டுக்களை மேலே குறித்தோம்.
  

எனும் குறும்பாட்டில் நுண்வலைப் பரதவர் மடமகள் தலை மகளாதலறிக.
  

இன்னும்
  

(ஆ) “பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணா
திருங்கடன் மூழ்குவார் தங்கை-இருங்கடலுன்
முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே
ஒத்தனம் யாமே யுளம்”
  

(திணைமாலை நூற்றைம்பது-33)
  

எனும் திணைமாலை வெண்பாவிலும் சங்கு குளிப்பாரின் தங்கை தலைமகளாவதறிக.
  

(3) (அ) மருதநில மக்கள் தலைவராதலை,
  

(அ) “தொண்டி யன்ன என்னலந் தந்து
கொண்டனை சென்மோ மகிழ்ந நின்சூளே.” 
  

  (குறுந்-238)

எனுங்குன்றியன் குறும்பாட்டிற் காண்க.
  

  

அன்றியும்
  

(ஆ) மேகந்தோய் சாந்தம் விசைதிமிசு காமகி
னாகந்தோய் நாக மெனவிவற்றைப்-போக
எறிந்துழுவார் தங்கை யிருந்தடங்கண் கண்டு
மறிந்துழல்வா னோவிம் மலை”   

(28 திணைமாலை-150)