நடத்துவார் பிறரேவல் செய்யாதார் என்பதனானும் இவர் புறப்பொருட்குரியராயினார் என்க எனவே, இவ்வெழுவகைத்திணையும் அகம் புறம் என இருவகையாயின. |
“என்றோற் றனைகொல்லோ. நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல் ஈங்குருச் சுருங்கி இயலுவாய் நின்னொடு உசாவுவென் நின்றீத்தை; |
அன்னையோ, காண்டகை இல்லாக் குறள்நாழிப் போழ்தினான் |
ஆண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை வேண்டுவல் என்று விலக்கினை நின்போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று; |
மாண்ட எறித்த படைபோல் முடங்கி மடங்கி |
நெறித்துவிட் டன்ன நிறையோரால் என்னைப் பொறுக்கல்லா நோய்செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் நீநல்கின் உண்டென் னுயிர்; |
குறிப்புக்காண் வல்லுப் பலகை யெடுத்து நிறுத்தன்ன கல்லாக் குறள கடும்பகல் வந்தெம்மை இல்லத்து வாவென மெய்கொளீஇ எல்லாநின் பெண்டிர் உளர்மன்னோ கூறு; |
நல்லாய்கேள் உலகத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான் புக்ககலம் புல்லின் நெஞ்சூன்றும் புறம்புல்லின் அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன் அருளீமோ பக்கத்துப் புல்லச்சிறிது: |
போசீத்தை மக்கண் முரியேநீ மாறினித் தொக்க மரக் கோட்டஞ் சேர்ந்தெழுந்த பூங்கொடிபோல நிரப்பமில் யாக்கை தழீஇயின ரெம்மைப் புரப்பே மென் பாரும் பலராற் பரத்தையன் பக்கத்துப் புல்லீமா யென்னுமாற் றொக்க உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னின் இழிந்ததோ கூனின் பிறப்பு: |