பக்கம் எண் :

200தொல்காப்பியம் - உரைவளம்

கழிந்தாங்கே,     யாம்வீழ்து மென்றுதன் பின்செலவு முற்றீயாக்
கூனி குழையுங் குழைவுகாண்;
  

யாமை,          எடுத்து நிறுத்தற்றாற் றோளிரண்டும் வீசி,
யாம்வேண்டே மென்று விலக்கவு மெம்வீழுங்
காமர் நடக்கு நடைகாண் கவர்கணைச்
சாமனார் தம்முன் செலவு காண்க.
  

ஒ ஒகாண்,       நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணாம்
உசாவுவங் கோனடிதொட் டேன்;
  

ஆங்காக        சாயலின் மார்ப அடங்கினேன் ஏ ஏ
பேயம் பேயும் துள்ள லுறுமெனக்
கோயிலுட் கண்டார் நகாஅமை வேண்டுவல்
தண்டாத் தகடுருவ வேறாகக் காவின்கீழ்
போதர் அகடாரப் புல்லி முயங்குவேம்
துகடீர்பு காட்சி அவையத்தார் ஓலை
முகடுகாப்பு யாத்துவிட் டாங்கு.”
  

(கலி-மரு-29)
  

இதனுள்     ஒருவரையொருவர்  இழித்துக்  கூறினமையான்  அடியார்  என்பதூஉம்  மிக்க  காமத்தின்1
வேறுபட்டு  வருதலாற்  பெருந்திணைப்பாற்படும்  என்பதூஉம்  கண்டுகொள்க.  இது தானே கைக்கிளைக்கும்
உதாரணமாம். வினைவலர்மாட்டு வருவன வந்தவழிக் கண்டுகொள்க.  

  (55)

நச்சினார்க்கினியர்
  

25. அடியோர் பாங்கினும்...............புலவர்.
  

இது,  மேல்  நால்வகை  நிலத்து  மக்களுந்  தலைமக்களாகப்  பெறுவரென்றார்,  அவரேயன்றி இவருந்
தலைமக்களாகுப கைக்கிளை பெருந்திணைக்க ணென்கின்றது.
  

இதன்  பொருள்:-  அடியோர்  பாங்கினும்  -  பிறர்க்குக்  குற்றறேவல் செய்வோரிடத்தும், வினைவலர்
பாங்கினும்-பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோரிடத்தும், கடி வரையில்  


1. மிக்ககாமம்  -  மேல்பட்டகாமம்.  அதவாது ஐந்திணைக் காமம். அதனின் வேறுபட்டு வரும் காமம்
பெருந்திணைப்பாற்படும்.