புறத்து என்மனார் புலவர் - தலைமக்களாக நாட்டிச் செய்யுட் செய்தல் நீக்கப்படாது நடுவணைந்திணைப் புறத்து நின்ற கைக்கிளை பெருந்திணைகளுள் என்றவாறு. |
கூன்பாட்டினுள்2 |
“நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணா முசாவுவங் கோனடி தொட்டான்.”
எனவும்,
|
“பேயும் பேயுந் துள்ள லுறுமெனக் கோயிலுட் கண்டார் நகாமை வேண்டுவல்” |
(கலி-94) |
எனவும் பெருந்திணைக்கண் அடியோர் தலைவராக வந்தது. என்னை? கோன் அடிதொட்டேன் என்றமையானுங் கோயில் என்றமையானும்3 இவர்கள் குற்றேவன்மாக்களாயிற்று. |
‘ஏ எ யிஃதொத்தன்’ என்னும் குறிஞ்சிக் கலியுள், “போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள் வேட்டார்க் கினிதாயி னல்லதை நீர்க்கினிதென் நுண்பவோ நீருண் பவர்.” |
(கலி-62) |
தீயகாமம் இழிந்தோர்க் குரிமையின், இதுவும் அடியோர் தலைவராக வந்த கைக்கிளை. “அடியோர்” எனவே இருபாற்றலை மக்களும் அடங்கிற்று. ‘கடிவரையில’ என்றதனான் அவருட் பரத்தையரும் ஊரென்று கொள்க. |
‘இகல்வேந்தன்’ என்னும் முல்லைக் கலியுள், “மேயு நிறைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோ ராயனை யல்லை பிறவொ வமரருண் ஞாயிற்றுப் புத்தேண் மகள்.” |
(கலி-108) |
என்பதனால் தலைவன் வினைவல பாங்கனாயினவாறு காண்க. இதனுள், |
|
2. கூனும் குறளும் உறழ்ந்து கூறுவதாக வந்த பாடல். |
3. கோயில் |