பக்கம் எண் :

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் சூ.25201

புறத்து    என்மனார்    புலவர்   -    தலைமக்களாக    நாட்டிச்    செய்யுட்   செய்தல்   நீக்கப்படாது
நடுவணைந்திணைப் புறத்து நின்ற கைக்கிளை பெருந்திணைகளுள் என்றவாறு.
  

கூன்பாட்டினுள்2  
 

“நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணா
முசாவுவங் கோனடி தொட்டான்.”
 


எனவும்,  

“பேயும் பேயுந் துள்ள லுறுமெனக்
கோயிலுட் கண்டார் நகாமை வேண்டுவல்”
  

  (கலி-94)
 

எனவும்   பெருந்திணைக்கண்  அடியோர்  தலைவராக  வந்தது.  என்னை?  கோன்  அடிதொட்டேன்
என்றமையானுங் கோயில் என்றமையானும்3 இவர்கள் குற்றேவன்மாக்களாயிற்று.
  

‘ஏ எ யிஃதொத்தன்’ என்னும் குறிஞ்சிக் கலியுள்,
“போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள்

வேட்டார்க் கினிதாயி னல்லதை நீர்க்கினிதென்
நுண்பவோ நீருண் பவர்.”

  (கலி-62)
 

தீயகாமம்    இழிந்தோர்க்  குரிமையின்,  இதுவும்  அடியோர் தலைவராக வந்த கைக்கிளை. “அடியோர்”
எனவே   இருபாற்றலை   மக்களும்   அடங்கிற்று.   ‘கடிவரையில’   என்றதனான்  அவருட் பரத்தையரும்
ஊரென்று கொள்க.
  

‘இகல்வேந்தன்’ என்னும் முல்லைக் கலியுள்,
“மேயு நிறைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோ

ராயனை யல்லை பிறவொ வமரருண்
ஞாயிற்றுப் புத்தேண் மகள்.”   
  

  (கலி-108)
 

என்பதனால் தலைவன் வினைவல பாங்கனாயினவாறு காண்க. இதனுள்,  


2. கூனும் குறளும் உறழ்ந்து கூறுவதாக வந்த பாடல்.
  

3. கோயில்