பக்கம் எண் :

208தொல்காப்பியம் - உரைவளம்

உரியராவர்   என்பதாம்.   உரியராயினவாறு  அறம்பொருள்  இன்பங்கள்  வழுவ மகளிரைக் காதலித்தலான்
என்றவாறாயிற்று.
  

“ஏஏ இஃதொத்தன் நாணிலன் தன்னொடு
மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்றும்
மே வினு மோவாக் கடையும அஃதெல்லா
நீயறிதி யானஃ தறிகல்லேன் பூவமன்ற
மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான்
புல்லினி தாகலிற் புல்லினேன் எல்லா
தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா
செய்வது நன்றாமோ மற்று;
சுடர்த்தொடீ போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள்
வேட்டார்க் கினிதாயின் அல்லது நீர்க்கினிதென்
றுண்பவோ நீருண் பவர்;
செய்வ தறிகல்லேன் யாதுசெய் வேன்கொலோ
ஐவாய் அரவின் இடைப்பட்டு நைவாராம்
மையின் மதியின் விளங்கு முகத்தாரை
வௌவிக் கொளலும் அறனெனக் கண்டன்று;
அறனு மதுகண்டற் றாயிற் றிறனின்றிக்
கூறுஞ்சொற் கேளான் நலிதரும் பண்டுநாம்
வேறல்ல மென்பதான் றுண்டால் அவனொடு
மாறுண்டோ நெஞ்சே நமக்கு.”   
 

  (கலி-குறிஞ்-26)
 

இதனுள்    “வௌவிக்   கொளலும்   அறனெனக்   கண்டன்று”  எனவும்  “நீர்க்கினி  தென்றுண்பவோ
நீருண்பவர்”  எனவும்   தலைமகள்   கூறுதலானும்,   தலைமகள்   முன்இழித்  துரைத்தலானும்,  ஊடியுணர்
வாள்போல    உடன்பட்டமையனும்,    இஃது    உயர்ந்தோர்மாட்டு   வந்த   கைக்கிளை.4  பெருந்திணை
வந்தவழிக்கண்டு கொள்க.  


4. ‘வௌவிக்  கொளறும்  அறன்’  என்றதால்  அறன்  அறிந்த அறிவினன் தலைவன் எனக் கொண்டு
உயர்ந்தோர் என்றார் போலும்