பக்கம் எண் :

212தொல்காப்பியம் - உரைவளம்

தட்டிலோளே யம்மா வரிவை
யெமக்கே வழிகதில் விருந்தே சிவப்பான்று
சிறியமுள் ளெயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகங்காண் கம்மே.” 
  

  (நற்றிணை-120)

விருந்தொடு  புக்கோன்   கூற்று. செவிலி  கூற்றுமாம்.  இந்நற்றிணை வாழையீர்ந்தடி வகைஇ என்றலின்
வேளாண் வருணமாயிற்று
  

“மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங் கெழிலி பௌவம் வாங்கித்
தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய வேமுறு காலை
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி
அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவடைந் திருந்த அருமுனை இயவில்
சீறூ ரோளே ஒண்ணுதல் யாமே
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி
அறிஞர் யாத்த வலங்குதலை பெருஞ்சூடு
கள்ளார் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயில்
அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து
வினைவயிற் பெயர்க்குந் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே”.   

  (அகம்-84)
   

இது  தூதுகண்டு    வருந்திக்  கூறியது இக்களிற்றியானை நிரையுட் டன்னூரும் அருமுனையியவிற் சீறூர்
என்றலிற் றான் குறுநில மன்னனென்பது பெற்றாம்.
  

“அகலிருவிசும்பகம்” என்னும் அகப்பாட்டும் பொருணோக்கினால் இதுவே யாமா றுணர்க.
  

“இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களக்
தொருபடை கொண்டு வருபடை பெயர்க்குஞ்
செல்வ முடையோர்க்கு நின்றன்று விறலெனப்