பக்கம் எண் :

220தொல்காப்பியம் - உரைவளம்

எனவே  ஒழிந்த  பகைவயிற்பிரிவு  அரசர்க்கே  உரித்தென  மேலே கூறுப. உயர்ந்தோரெனக் கூறலின்
வேளாளரை ஒழித்தாரென்றுணர்க.
  

உதாரணம் :-
  

“அரம்போ ழல்வளை தோணிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரங்கா முன்ன அரும்புமுதி ரீங்கை
ஆலி யின்ன வால்வீ தாஅய்
வைவா லோதி மையணல் ஏய்ப்பத்
தாதுறு குவளைப்போதுபிணி யவிழப்
படாஅப் பைங்கட் பாவடிக் கயவாய்க்
கடாஅம் மாறிய யானை போலப்
பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ
மைதோய் விசும்பின் மாதிரத் துழிதரப்
பனியடூஉ நின்ற பானாட் கங்குல்
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரணில் காலைக்
கைதொழு மரபிற் கடவுள் சான்ற
செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற
ஒன்பது குடைய நண்பக லொழித்த
பீடில் மன்னர் போல
ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே.” 
  

(அகம்-125)
 

இதனுட்     பலருங்    கைதொழும்   மரபினையுடைய  கடவுட்டன்மை  யமைந்த  செய்வினையெனவே
ஓதற்பிரிதலென்பது     பெற்றாம்.    “சிறந்தது  பயிற்ற   லிறந்ததன்  பயனே2.”  என்பதனாற்  கிழவனும்
கிழத்தியும்  இல்லத்திற்  சிறந்தது      பயிற்றாக்கால்  இறந்ததனாற்  பயனின்றாதலின்  இல்லறம்  நிரம்பா
வாழ்க்கை யென்றார். இல்லறம் நிகழ்கின்ற காலத்தே  


2. சிறந்த துறவறத்தைப் புரிதல் கடந்த இல்லற வாழ்க்கையின் பயன்