பக்கம் எண் :

தானே சேறலும் தன்னொடு சிவணி சூ.29225

எனவும்,
  

“பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்”.  

(கலி-31)
  

எனவும் மண்கோடலுந் திறைகோடலும் அரசர்க்கே உரித்தாகக் கூறியது.
  

“நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே.”   

(கலி-31)

எனச் சுரிதகத்துக் கூறியவாற்றா னுணர்க.
  

“பொருபெரு வேந்தர்க்குப் போர்ப்புணை யாகி
யொருபெருங் காதலர் சென்றார் வருவது
வாணிய வம்மோ கனங்குழை கண்ணோக்கா
னீணகர் முன்றின்மே னின்று”
  

இது வேந்தர்க்குற்றுழி வேந்தன் பிரிந்தது.
  

“கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் போர் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய விவட்கே.”   

(நற்றிணை 10)
 

இது குறுநிலமன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது.
  

“மலைமிசைக்குலைஇய”   

(அகம் 84)
 
என்பது அது.
 

இனி     வேட்டைமேற்    சேறலும் நாடுகாணச் சேறன் முதலியனவும் பாலையாகப் புலனெறி வழக்கஞ்
செய்யாமை   உணர்க.   வேந்தனென்று      ஒருமையாற்  கூறினார். “மெய்ந்நிலை மயக்கினா   அகுநவும்”
என்னும் விதிபற்றி1 சிவணிய வென்பதனை வினையெச்ச மாக்கி நட்பாடல் வேண்டியென்றுமாம்2
  


1. “மெய்ந்நிலை மயக்கின் ஆஅகுந” (தொல் சொல். எச்ச-53) என்பதில் ஒருமைச்சொல்       பன்மைப்
பொருளில் வரும் என்பது கூறப்படுகிறது. அதற்கேற்ப தானே என ஒருமையிற் கூறினாலும் தாமே எனப்
பன்மை கொள்ளல் வேண்டும்.
  

2. சிவணிய   ஏனோர்-பெயரெச்சத்தொடராக   உரை  கூறினார். சிவணிய என்பதைச் செய்யிய என்னும்
வினையெச்சமாகக் கொண்டு சிவண வேண்டி எனவும் பொருள் கொள்ளலாம் என்றார்.