பக்கம் எண் :

226தொல்காப்பியம் - உரைவளம்

பாரதியார்
  

29. தானே..................மேற்றே
  

கருத்து:-   இது,  உயர்ந்தோர்க்குரிய  பிரிவுவகை  மூன்றனுள்  மேற்சூத்திரம்  கூறிய  இரண்டு  நீக்கி,
அதிற்கூறப்படாத பகைவயிற் பிரிவுக்கு உரியாரை உணர்த்துகின்றது.
  

குறிப்பு:-   தானே என்பதன் ஏகாரம் பிரிநிலை; வந்த பகையை யடர்க்கத் தான் ஏவுதற்குரிய படைஞர்
பிறரை  நீக்கி  வேந்தன்  தானே  சேறல் என்பதைச் சுட்டும்.    ஈற்றேகாரம் அசை. நாட்டின் பகைவராய்
வந்தாரை நலிவது வேந்தனுக்கே கடமையும் உரிமையும் ஆகும் மற்றையோர் மன்னராணையின்றித் தாமே
பகைமை   பாராட்டிப்  பொருதல்  அரசனால்  ஒறுக்கப்படும்      குற்றமாகும்.  அதனால்  தன்கடனாற்ற,
மண்ணசையால்  வந்த  வேந்தனை  அஞ்ச  எதிர்சென்று     பொருதழிக்க  அந்நாட்டு  வேந்தன் தானே
செல்வதும்,  தன்  படைநரை  ஏவி அவரைக் கொண்டு    அக்கடனாற்றிப் பகையழித்தலும், அவ்வேந்தன்
மேலனவாவது   வெளிப்படை.  நெடுஞ்செழியன்  வந்த     பகைவர்  மேற்சென்று  தலையாலங்கானத்துப்
பொருதழித்தது  வேந்தன்  தானே  சேறற்குக்  காட்டாகும்.     கருணாகரத்  தொண்டைமான் படையொடு
சென்று கலிங்கமழித்தது அரசனொடு சிவணிய ஏனோர் சேறற்கு எடுத்துக் காட்டாம்.
  

(I) பகைதெறவேந்தன்தானே சேறற்குச் செய்யுள்.
  

1 “மயங்கமர் மாறட்டு மண்வௌவி வருபவர்
தயங்கிய களிற்றின்மேல் தகைகாண விடுவதோ
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
தாள்வளம் படவென்று தகைநன்மா மேற்கொண்டு
வாள்வென்று வருபவர் வனப்பார விடுவதோ
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்
வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
                               எனவாங்கு
வாளாதி வயங்கிழாஅய் வருந்துவ ளிவளென
நாள்வரை நிறுத்துத்தாம் சொல்லிய பொய்யன்றி